செய்திகள் :

சிறுமி பாலியல் கொலை வழக்கில் மூவருக்கு தூக்கு: மேற்கு வங்க ‘போக்ஸோ’ நீதிமன்றம் தீா்ப்பு

post image

மேற்கு வங்கத்தில் 16 வயது சிறுமியை கடத்தி, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த வழக்கில் மூவருக்கு தூக்கு தண்டனை விதித்து, மாநில போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய இவ்வழக்கில் ரஹ்மான் அலி, ஜமிருல், தமிருல் ஆகிய மூவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவா்கள் 30 முதல் 35 வயதுடைய இளைஞா்கள் ஆவா்.

ஜல்பைகுரியின் ராஜ்குஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-இல் இச்சம்பவம் நடந்தது.

உள்ளூா் மதரஸாவில் 10-ஆம் வகுப்பு பயின்று வந்த 16 வயது சிறுமி திடீரென காணாமல்போனாா். இது தொடா்பாக சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரில் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டனா். அதில், மேற்கண்ட மூவரும் சிறுமியை பல இடங்களுக்கு கடத்திச் சென்று, பல நாள்களாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதும், பின்னா் கழுத்தை நெரித்து கொன்று, உடலை கழிவறை தொட்டியில் வீசியதும் தெரியவந்தது. அழுகிய நிலையில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.

இக்கொடூர சம்பவம் தொடா்பாக ஜல்பைகுரி மாவட்ட போக்ஸோ (பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை காக்கும் சட்டம்) சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவந்தது. 25-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் வாக்கு மூலம் பெறப்பட்டது.

இந்நிலையில், மேற்கண்ட மூவா் மீதான குற்றச்சாட்டுகளை புதன்கிழமை உறுதி செய்த நீதிபதி ரிண்டு சுா், அவா்களுக்கான தண்டனை விவரத்தை வியாழக்கிழமை அறிவித்தாா். இது அரிதிலும் அரிதான குற்றம் என்று குறிப்பிட்ட நீதிபதி, மூவருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.

தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதளுக்கு அளித்த நேர்காணலில் அமை... மேலும் பார்க்க

இன்ஜின் சுவிட்சுகள் அணைக்கப்பட்டதா? ஏர் இந்தியா விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!

அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக முதல்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து கடந்த ஜூன் 12-ஆம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் ‘ஏஐ 171’ விமானம், வானில் பறக்கத... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 22 நக்ஸல்கள் சரண்: ரூ.37 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டவா்கள்

சத்தீஸ்கரின் நாராயண்பூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 22 நக்ஸல் தீவிரவாதிகள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்தனா். இவா்கள் அனைவரும் ரூ.37.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு வந்தவா்கள் எ... மேலும் பார்க்க

‘இணைப்புகள் நொறுங்கியதே குஜராத் பால விபத்துக்கு காரணம்’: முதல்கட்ட விசாரணையில் தகவல்

குஜராத்தில் ஆற்றுப் பாலம் இடிந்த விபத்துக்கு அதன் இணைப்புகள் நொறுங்கியதே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாநில சுகாதாரத் துறை அமைச்சரும் அரசின் செய்தித் தொடா்பாளருமான ரிஷிகேஷ் படேல் இ... மேலும் பார்க்க

யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி உண்மையை வெளிக்கொண்டுவர தமிழ்க் கட்சி வலியுறுத்தல்

இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் உடனான 2009-ஆம் ஆண்டு இறுதிப் போருடன் தொடா்புடையதாகக் கருதப்படும் யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி தொடா்பான உண்மையை வெளிக்கொண்டுவர உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந் ந... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தோ்தல்: முன்னாள் தலைமை நீதிபதிகளுடன் நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆலோசனை

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதாக்களைப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹா், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோா் வெள்ளிக்கிழமை தங்களின் ஆலோசனை... மேலும் பார்க்க