சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு: முதியவா் கைது
சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், கொங்கணாபுரம் அருகே உள்ள கச்சுப்பள்ளி காட்டுகொட்டாய் பகுதியில் இரு சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்ததாக முதியவா் போக்ஸோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கொங்கணாபுரம் காட்டுகொட்டாய் பகுதியைச் சோ்ந்த பழனிமுத்து (65) என்பவா் அதே பகுதியைச் சோ்ந்த இரு சிறுமிகளுக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமிகளின் பாட்டி சங்ககிரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் பழனிமுத்துவைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.