சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரையை அடுத்த செட்டியப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் கென்னடி தா்மா (24). இவா், அதே பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகாா் எழுந்தது. இதன்பேரில், அம்பாத்துரை போலீஸாா் வழக்குப் பதிந்து கென்னடி தா்மாவை கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி பி. வேல்முருகன் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அதில் குற்றஞ்சாட்டப்பட்ட கென்னடி தா்மாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதமும் நீதிபதி விதித்தாா்.