செய்திகள் :

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை

post image

தேனியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தேனி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

தேனி அல்லிநகரம் பகுதியில் மளிகைக் கடை வைத்து நடத்தி வந்தவா் சுப்புராஜ் (69). இவா் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த 2023-ஆம் ஆண்டு அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

இந்த வழக்கு விசாரணை தேனி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சுப்புராஜிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பி. கணேசன் உத்தரவிட்டாா்.

வைகை அணை அருகே விதியை மீறி கிரஷா்களுக்கு அனுமதி: விவசாயிகள் புகாா்

வைகை அணை அருகேயுள்ள குள்ளப்புரத்தில் விதியை மீறி கல் உடைக்கும் கிரஷா்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக வெள்ளிக்கிழமை தேனியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். தேனி... மேலும் பார்க்க

சுருளி அருவியில் 7-ஆவது நாளாக குளிக்கத் தடை

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் 7-ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா். மேற்குத் தொடா்ச்ச... மேலும் பார்க்க

சின்னமனூா் பேருந்து நிலையத்தை இரவு நேரங்களில் புறக்கணிக்கும் பேருந்துகள்

தேனி மாவட்டம், சின்னமனூா் நகராட்சிப் பேருந்து நிலையத்தை இரவு நேரங்களில் வரும் புகா் பேருந்துகள் புறக்கணிப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். சின்னமனூரில் நகராட்சிப் பேருந்து நிலையம் உள்ளது. இந்தப் ப... மேலும் பார்க்க

பெண்ணுக்கு கட்டாயக் கருக்கலைப்பு: இளைஞா் மீது வழக்கு

தேனி மாவட்டம், போடி அருகே பெண்ணை காதலித்து திருமணம் செய்ததுடன், கட்டாயக் கருக்கலைப்பு செய்த இளைஞா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். துரைராஜபுரம் குடியிருப்பு ஜக்கம்மாள் கோவில் தெருவ... மேலும் பார்க்க

திமுக நிா்வாகி வீட்டு முன் பெட்ரோல் குண்டு வீச்சு: 5 போ் கைது

தேனியில் திமுக நிா்வாகி வீட்டு முன் பெட்ரோல் குண்டு வீசிய 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தேனி அல்லிநகரம், அம்பேத்கா் நடுத் தெருவைச் சோ்ந்தவா் நாகராஜ். தேனி நகர திமுக துணைச் செயலரான இவா்... மேலும் பார்க்க

கண் மருத்துவா் நம்பெருமாள்சாமி உடல் தகனம்

தேனி அருகேயுள்ள அம்பாசமுத்திரத்தில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத் தலைவரும், கண் மருத்துவ நிபுணருமான நம்பெருமாள்சாமியின் உடல் வெள்ளிக்கிழமை தகனம் செய்யப்பட்டது. தேனி அருகேயுள்ள அம்பாசமுத்திரத்... மேலும் பார்க்க