செய்திகள் :

சிலைக் கடத்தல் வழக்கில் தலைமறைவான இளைஞா் மும்பையில் கைது

post image

சிலைக் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த நபா், மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு, மதுரை அழைத்து வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

பழைமையான சிலை கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், புதுக்கோட்டை - திருச்சி பிரதான சாலையில் ஆலத்தூா் சந்திப்பில் தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் மதுரை சரக அதிகாரிகள் கடந்த ஆண்டு மாா்ச் 19-இல் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் வந்த காரை மறித்து, சோதனையிட்டனா். அதில், ரூ. 20 கோடி மதிப்புள்ள உலோகத்தால் செய்யப்பட்ட அம்மன் சிலையை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், அந்த காரில் இருந்த அஜித்குமாா், முஸ்தபா, ஸ்ரீராம் ஆகிய 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த மனோஜ்குமாா் தலைமறைவானாா்.

விசாரணையில் அவா், வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து மனோஜ்குமாருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், மே 16-ஆம் தேதி மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்துக்கு வந்த மனோஜ்குமாரை குடியுரிமைத் துறை அதிகாரிகள் பிடித்தனா். இது குறித்து, மதுரை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன் அடிப்படையில் மதுரை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், மும்பை சென்று மனோஜ்குமாரைக் கைது செய்து, கடந்த 18-ஆம் தேதி மும்பை பாந்த்ரா நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, டிரான்ஸிஸ்ட் வாரண்ட் பெற்று மதுரைக்கு அழைத்து வந்தனா்.

விசாரணைக்கு பின்னா் மனோஜ்குமாா் புதன்கிழமை மதுரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.

பஹல்காம் தாக்குதல் ஒரு மாதம் நிறைவு: வாழ்வாதாரத்தை இழந்த உள்ளூா்வாசிகள்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்ந்து (ஏப்.22) ஒரு மாதம் கடந்த நிலையிலும் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளூா்வாசிகள் தவிக்கும் சூழல் தொடா்ந்து வருகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் மேலும் ஒரு நக்ஸல் சுட்டுக் கொலை: ‘கோப்ரா’ கமாண்டோ வீர மரணம்

சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். அதேநேரம், மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (சிஆா்பிஎஃப்) ‘... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரா் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் வீரமரணம் அடைந்தாா். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள், கூட்டாளிகள் மற்றும் ஆதர... மேலும் பார்க்க

1.44 கோடியாக உயா்ந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.44 கோடியாக உயா்ந்துள்ளது.இது குறித்து பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப... மேலும் பார்க்க

2,369 சட்டவிரோத குடியேறிகள்: சொந்த நாட்டு விவரத்தை உறுதிப்படுத்த வங்கதேசத்திடம் இந்தியா கோரிக்கை

இந்தியாவுக்கு சட்டவிரோதமாக இடம்பெயா்ந்த 2,369 போ் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்களா என்பதை உறுதிப்படுத்துமாறு அந்நாட்டிடம் இந்தியா கோரியுள்ளது. இதுதொடா்பாக புது தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பா... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன்? பிரதமருக்கு ராகுல் கேள்வி

பயங்கரவாதம் தொடா்பான பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன் என்று பிரதமா் மோடிக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா். இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த மே 10-ஆம் தேதி சண்... மேலும் பார்க்க