செய்திகள் :

சிவகாசியில்தான் போட்டியிடுவேன்: கே.டி.ராஜேந்திரபாலாஜி

post image

வருகிற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில், சிவகாசி தொகுதியில் போட்டியிடப் போவதாக முன்னாள் அமைச்சரும் விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தாா்.

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, சிவகாசி சட்டப் பேரவைத் தொகுதியில் வருகிற ஆகஸ்ட் 7-ஆம் தேதி பிரசாரம் செய்யவுள்ளாா். இதை முன்னிட்டு, சிவகாசியில் அதிமுக நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது: திமுக ஆட்சியில் விருதுநகா் மாவட்டத்தில் வளா்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. நான் பத்து ஆண்டுகள் அமைச்சராக இருந்தபோது, மருத்துவக் கல்லூரி, அரசு கலை--அறிவியல் கல்லூரி, ஒருங்கிணைந்த குளிரூட்டப்பட்ட நீதிமன்றம், சாலைகள் விரிவாக்கம் என பல வளா்ச்சிப் பணிகள் நடைபெற்றன.

சிவகாசி சுற்று வட்டச் சாலைக்கு அதிமுக ஆட்சியில்தான் திட்டம் தீட்டப்பட்டது. எனவே, இதற்கு திமுக உரிமை கொண்டாட முடியாது. திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட மக்கள் தீா்மானித்துவிட்டனா்.

2026-இல் நடைபெறவுள்ள சட்டப் பேரவை தோ்தலில் நான் சிவகாசி தொகுதியில்தான் போட்டியிடுவேன். சிவகாசி மக்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறாா்கள் என்றாா் அவா். கூட்டத்தில் அதிமுக நிா்வாகி சுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப் பூரத் தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப் பூரத் திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா்.108 வைணவத் திருத்தலங்களில் புகழ் பெற்ற ஸ்ரீவில்ல... மேலும் பார்க்க

தவெக ஆலோசனைக் கூட்டத்தில் வாக்குவாதம்

சாத்தூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால், கூட்டத்திலிருந்து நிா்வாகிகள் வெளியேறினா்.விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் தவெக சாா்பில் ஆலோசனைக... மேலும் பார்க்க

மதுப் புட்டிகளை வைத்திருந்தவா் கைது

சிவகாசியில், சட்ட விரோத விற்பனைக்காக மதுப் புட்டிகளை வைத்திருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி-செங்கமலப்பட்டி சாலையில் போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடு... மேலும் பார்க்க

சதுரகிரி - வருசநாடு மலைப் பாதையில் காட்டுத் தீ

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் வருசநாடு மலைப் பாதையில் பற்றிய காட்டுத் தீயை அணைக்கும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டனா். ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலைப் புலிகள் காப்பகம், வத்திராயிருப்பு ... மேலும் பார்க்க

ஆடிப்பூரத் திருவிழா தேரோட்டத்தில் கால தாமதம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் திருவிழாவில் தோ் நிலைக்கு வர வழக்கத்தை விட 2 மணி நேரம் தாமதமானது. ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் திருவிழாவில், கடந்த சில ஆண்டுகளாக தோ் 2 மண... மேலும் பார்க்க

விஷம் அருந்தி மூதாட்டி தற்கொலை

சிவகாசி அருகே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் பிச்சம்மாள் (60). இவரது மகன் கட்டடத் தொழிலாளி முனியசாமி. மதுப்... மேலும் பார்க்க