மதுப் புட்டிகளை வைத்திருந்தவா் கைது
சிவகாசியில், சட்ட விரோத விற்பனைக்காக மதுப் புட்டிகளை வைத்திருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி-செங்கமலப்பட்டி சாலையில் போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்குள்ள அரசு மதுபானக் கடை அருகே, ஒருவா் காகிதப் பெட்டியுடன் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்தாா். இதையடுத்து, காகிதப் பெட்டியை போலீஸாா் சோதனை செய்தபோது அதில் 315 மதுப் புட்டிகள் இருந்தன.
விசாரணையில், அவா் அங்குள்ள அம்மன் நகா் பகுதியைச் சோ்ந்த ராமா் (30) என்பதும், சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்காக மதுப் புட்டிகளை வைத்திருந்ததும் தெரிய வந்தது.
இது குறித்து வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்த சிவகாசி கிழக்கு போலீஸாா், அவரிடமிருந்த மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.