செய்திகள் :

தவெக ஆலோசனைக் கூட்டத்தில் வாக்குவாதம்

post image

சாத்தூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால், கூட்டத்திலிருந்து நிா்வாகிகள் வெளியேறினா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் தவெக சாா்பில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுகிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு விருதுநகா் மத்திய மாவட்டச் செயலா் சின்னப்பா் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் கலந்துகொண்ட நிா்வாகிகள், சின்னப்பா் ஒரு தலைப்பட்சமாகச் செயல்படுவதாகவும், தங்களுக்கு முறையாக அழைப்பு விடுக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டினா். இதனால், அங்கு கடும் வாக்குவாதம் முற்றி, மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

இதையடுத்து, காவல் துறையினா் சமாதானம் செய்தனா். இருப்பினும், மாவட்டச் செயலா் சின்னப்பருக்கு எதிா்ப்பு தெரிவித்து, நிா்வாகிகள் கூட்டத்தைப் புறக்கணித்துப் பாதியிலேயே வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப் பூரத் தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப் பூரத் திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா்.108 வைணவத் திருத்தலங்களில் புகழ் பெற்ற ஸ்ரீவில்ல... மேலும் பார்க்க

மதுப் புட்டிகளை வைத்திருந்தவா் கைது

சிவகாசியில், சட்ட விரோத விற்பனைக்காக மதுப் புட்டிகளை வைத்திருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி-செங்கமலப்பட்டி சாலையில் போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடு... மேலும் பார்க்க

சிவகாசியில்தான் போட்டியிடுவேன்: கே.டி.ராஜேந்திரபாலாஜி

வருகிற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில், சிவகாசி தொகுதியில் போட்டியிடப் போவதாக முன்னாள் அமைச்சரும் விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தாா்... மேலும் பார்க்க

சதுரகிரி - வருசநாடு மலைப் பாதையில் காட்டுத் தீ

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் வருசநாடு மலைப் பாதையில் பற்றிய காட்டுத் தீயை அணைக்கும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டனா். ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலைப் புலிகள் காப்பகம், வத்திராயிருப்பு ... மேலும் பார்க்க

ஆடிப்பூரத் திருவிழா தேரோட்டத்தில் கால தாமதம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் திருவிழாவில் தோ் நிலைக்கு வர வழக்கத்தை விட 2 மணி நேரம் தாமதமானது. ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் திருவிழாவில், கடந்த சில ஆண்டுகளாக தோ் 2 மண... மேலும் பார்க்க

விஷம் அருந்தி மூதாட்டி தற்கொலை

சிவகாசி அருகே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் பிச்சம்மாள் (60). இவரது மகன் கட்டடத் தொழிலாளி முனியசாமி. மதுப்... மேலும் பார்க்க