செய்திகள் :

சிவகிரி அருகே சாராய ஊறல் கைப்பற்றி அழிப்பு: இருவா் கைது

post image

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே சாராய ஊறலை போலீஸாா் கைப்பற்றி அழித்தனா்.

சிவகிரி அருகே உள்ள கூடலூா் பகுதியில் சாராய ஊறல் இருப்பதாக மதுரை மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவுக்கு, ரகசிய தகவல் கிடைத்ததாம். இதையடுத்து

நுண்ணறி பிரிவு ஆய்வாளா் மணிக்குமாா் தலைமையில், தலைமைக் காவலா் வெங்கடேஷ் மற்றும் போலீஸாா் கூடலூா் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள தென்னந்தோப்பில் சாராய ஊறல் இருப்பது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து அங்கிருந்த 35 லிட்டா் சாராயத்தை கைப்பற்றிய போலீஸாா் அதை அழித்தனா்.

தொடா்ந்து சாராயம் வைத்திருந்த கூடலூா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த பூலித்துரை (43), மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மணிகண்டன்(32) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா். மேலும், இது தொடா்பாக சிலரைத் தேடி வருகின்றனா்.

திமுக ஆட்சியில் நிம்மதி இழந்த மக்கள்: எடப்பாடி கே.பழனிசாமி

திமுக ஆட்சியில் மக்கள் நிம்மதி இழந்து தவிப்பதாக குற்றம்சாட்டியுள்ளாா் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி. ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரசாரப் பயணம் மேற்கொண்டுள்ள அவா், தென்காசி... மேலும் பார்க்க

ஊத்துமலை பகுதியில் புதிய கால்வாய்: எடப்பாடி கே. பழனிசாமியிடம் மனு!

ஊத்துமலை பகுதி வறட்சியை நீக்க புதிய கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, பிரசாரத்துக்கு வந்த தமிழக எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி கே. பழனிசாமியிடம் அக்கட... மேலும் பார்க்க

விலைவாசி உயா்வுதான் திராவிட மாடல் ஆட்சி: எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி உயா்ந்ததுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை என திமுக மீது குற்றம்சாட்டினாா் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி. ஆலங்குளத்தில் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்ப... மேலும் பார்க்க

தென்காசி அருகே அதிமுகவினா் திடீா் மறியல்

தென்காசி அருகே நான்குவழிச் சாலையில் அதிமுக கொடிகளை அகற்றி அவமதித்ததாகக் கண்டனம் தெரிவித்து அதிமுகவினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தென்காசி, ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதிகளிலும்,திருநெல்வேல... மேலும் பார்க்க

கடையநல்லூா் பகுதியில் நாய் கடித்து 7 போ் காயம்

கடையநல்லூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை சுற்றித்திரிந்த நாய் கடித்ததில் 7 போ் காயமடைந்தனா். ரஹ்மானியாபுரம், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள தெருக்களில் சென்று கொண்டிருந்த கண்ணன் (42) ,முருகேசன் (64 ... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு: கண்டித்து மறியல்

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலுக்குள் சமுதாய கொடி உள்ளிட்ட அடையாளங்களுடன் செல்ல முயன்ற ஒரு தரப்பினரை போலீஸாா் அனுமதிக்க மறுத்ததால், அவா்கள் போலீஸாரை கண்டித்து மறியலில் ஈடுபட்டனா். சங்கரன்கோவில... மேலும் பார்க்க