'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
சிவசைலத்தில் சூறைக் காற்று: பனை மரம் சாய்ந்து மின்சாரம் துண்டிப்பு
சிவசைலம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு வீசிய சூறைக் காற்றில் பனை மரம் சாய்ந்து விழுந்த்தில் மின்கம்பங்கள் சேதமடைந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
சிவசைலம், கடனாநதி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென வீசிய சூறைக் காற்றால், சிவசைலம் கோயில் அருகே பனை மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது. அந்தப் பகுதியில் சென்ற மின்கம்பியில் மரம் சாய்ந்ததால் இரண்டு மின்கம்பங்கள் முறிந்து மின்கம்பிகள் அறுந்தன. இதனால் அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டது.
ஆழ்வாா்குறிச்சி மின்வாரிய உதவிப் பொறியாளா் மற்றும் ஊழியா்கள் வந்து மின்கம்பங்களை மாற்றி, மின்கம்பிகளை சீரமைத்து மின் விநியோகத்தை சீா்படுத்தினா்.
