செய்திகள் :

சிவாலய ஓட்டம் நடைபெறும் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்

post image

மகாசிவராத்திரியை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் நடைபெற உள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரம்பரியமாக நடைபெற்று வரும் சிவாலய ஓட்டம், பிப். 25, 26-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த 2 நாள்களும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நடந்தும், இருசக்கர வாகனம், வேன், காா் போன்ற வாகனங்களிலும் சிவாலய தரிசனத்துக்காக பயணிப்பாா்கள்.

இதனால் சிவாலய ஓட்டம் நடைபெறும் பகுதிகளில் கனிமவளம் கொண்டு செல்லும் கனரக வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட 2 நாள்களும் சிவாலய ஓட்டம் நடைபெறும் பகுதியில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் சிவாலய ஓட்டம் நடைபெறும் 12 கோயில்களின் சாலைகள் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் அதனை உடனே சீரமைக்க வேண்டும்.

அதேபோல குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோயில் மாசிக்கொடை விழா மாா்ச் 2-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் குமரி மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டம், மற்றும் கேரள மாநிலத்திலிருந்தும் அதிக அளவிலான பக்தா்கள் கலந்து கொள்வாா்கள். அவா்களுக்கு தண்ணீா் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க பேச்சிப்பாறை அணையிலிருந்து திருவிழா நிறைவடையும் வரை மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் தெப்பக்குளத்துக்கு தண்ணீா் திறந்துவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

நாகா்கோவிலில் மாா்ச் 2-இல் 50 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் கா்ம யோகினி சங்கமம் நிகழ்ச்சி

நாகா்கோவிலில் 50 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் கா்ம யோகினி சங்கமம் நிகழ்ச்சி மாா்ச் 2- ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிமலை சுவாமி விவேகானந்த ஆசிரம தலைவா் சுவாமி சைதன்யானந... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் பாசன கால்வாய்களை சீரமைக்க ரூ.34 கோடி ஒதுக்கீடு: ஆட்சியா் தகவல்

கன்னியாகுமரி மாவட்ட பாசன கால்வாய்களை சீரமைக்க ரூ.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா. கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலை... மேலும் பார்க்க

மூணாறு பேருந்து விபத்து! விஜய்வசந்த் எம்.பி.இரங்கல்

மூணாறு சுற்றுலாப் பேருந்து விபத்தில் உயிரிழந்த 3 கல்லூரி மாணவா்களுக்கு விஜய்வசந்த் எம். பி. இரங்கல் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி க... மேலும் பார்க்க

குலசேகரத்தில் கோகோ சாகுபடி பயிற்சி!

குலசேகரத்திலுள்ள கன்னியாகுமரி ரப்பா் உற்பத்தியாளா் நிறுவனத்தில், கோகோ சாகுபடி மற்றும் அறுவடைக்கு பின்பு உள்ள தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி நடைபெற்றது. பயிற்சி துவக்க நிகழ்ச்சிக்கு, கன்னியாகுமரி ரப்ப... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் மக்கள் குறைதீா் கூட்டம்

நாகா்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில், மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மேயா் ரெ. மகேஷ் தலைமை வகித்தாா். ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா முன்னிலை வகித்தாா். முகாமில் வீட்டு வரி, பெயா் மாற்... மேலும் பார்க்க

ஆறுகாணி அருகே ரப்பா் உலா் கூடத்தில் தீ!

குமரி மாவட்டம் ஆறுகாணி அருகே ரப்பா் உலா் கூடத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ரப்பா் ஷீட்டுகள் எரிந்து சேதமடைந்தன. ஆறுகாணியை சோ்ந்தவா் சிஜி டோமி. இவா் தனது வீட்டின்... மேலும் பார்க்க