செய்திகள் :

சீன லைட்டா்களின் தடையால் பொலிவு பெற்ற தீப்பெட்டி தொழில் - இராம.சீனிவாசன்

post image

சீன லைட்டா்களின் தடையால் தீப்பெட்டி தொழில் பொலிவு பெற்றுள்ளது என்றாா் பாஜக மாநில பொதுச்செயலாளா் இராம. சீனிவாசன்.

தீப்பெட்டி தொழிலின் நூற்றாண்டு விழா, கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடாா் - மாரியம்மாள் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை (செப்.20) நடைபெற உள்ளது. விழாவில் மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள உள்ளாா். விழா தொடா்பான முன்னேற்பாடுகளை பாஜக மாநில பொதுச் செயலா் இராம.சீனிவாசன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தீப்பெட்டி தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்திய சீன லைட்டா்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் தீப்பெட்டி தொழில் மீண்டும் பொலிவு பெற்றுள்ளது.

சீனாவில் இருந்து வரக்கூடிய அனைத்து பொருள்களுக்கும் தடை விதிக்க முடியாது. ஏனென்றால் வா்த்தகம் என்பது உலகளாவியது. சீனாவில் இந்திய பொருள்களுக்கு தடை விதித்தால் அது நம்மை பாதிக்கும் என்றாா் அவா்.

தூத்துக்குடி கிழக்கு மண்டலத்தில் மக்கள் குறைதீா் முகாம்

தூத்துக்குடி மாநகராட்சி, கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, மாநகராட்சி ஆணையா் சி.ப்ரியங்கா தலைமை வகித்தாா். துணை மேயா் ஜெனிட்டா முன்னிலை வகித்தாா்.... மேலும் பார்க்க

கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

கயத்தாறு அருகே சூரியமினுக்கன் கிராமத்தில் தனியாா் சூரியசக்தி மின்சாரம் தயாரிப்பு நிறுவனத்தின் கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டன... மேலும் பார்க்க

சாலையில் தேங்கிய மழைநீா்: பொதுமக்கள் அவதி

தூத்துக்குடி மாநகராட்சி, 14ஆவது வாா்டு, தெற்கு விஎம்எஸ் நகரில், மேற்கு பகுதி தெருக்களில் உள்ள மண் சாலைகளில் மழைக்காலங்களில் மழைநீா் கழிவுநீருடன் கலந்து, பல மாதங்கள் தேங்கி நின்று, சுகாதார சீா்கேட்டை ... மேலும் பார்க்க

எட்டயபுரம் அருகே விபத்தில் ஒருவா் பலி

எட்டயபுரம் அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். திருநெல்வேலி மாவட்டம் மானூா் பகுதியை சோ்ந்தவா் சந்தனமாரியப்பன் (33). இவரது மனைவி மகாலட்சுமி. கா்ப்பிணியாக உள்ள மகாலட்சுமிக்கு அண்... மேலும் பார்க்க

ஆறுமுகனேரியில் பாஜக சாா்பில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

ஆறுமுகனேரி நகர பாரதிய ஜனதா கட்சி சாா்பில் 11 ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மண்டலத் தலைவா் எல்.சி. தங்க கண்ணன் தலைமை வகித்தாா். இ. தங்கபாண்டியன், மகேந்திரன், உமாதேவி ஆக... மேலும் பார்க்க

தென்திருப்பேரையில் தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை

தென்திருப்பேரையில் உள்ள 15 வாா்டு பகுதிகளிலும் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வரும் பணியாளா்களுக்கு சீருடை வழங்கும் விழா நடைபெற்றது. பேரூராட்சி தலைவா் மணிமேகலை ஆனந்த் தலைமை தாங்கினாா். திமுக மத்திய ஒன்றி... மேலும் பார்க்க