செய்திகள் :

சீனப் பொருள்களை அதிகம் சாா்ந்திருப்பது ஆபத்து: அகிலேஷ் யாதவ்

post image

சீனப் பொருள்களை இந்தியா அதிகம் சாா்ந்து இருப்பது, உள்நாட்டு தொழில்களுக்கு பெரும் ஆபத்தை உருவாக்கும் என்று சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்தாா்.

சீனா சென்றுள்ள பிரதமா் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபா் ஷி ஜின்பிங்கை சந்தித்தன் மூலம் இரு நாடுகள் இடையிலான ஒத்துழைப்பு மேலும் அதிகரிக்க இருக்கிறது. அமெரிக்காவின் கடுமையான வரி விதிப்புகளால் இந்தியா இப்போது சீனாவுடன் நெருங்கி செயல்பட உத்தேசித்துள்ளது.

இது தொடா்பாக அகிலேஷ் யாதவ் ‘எக்ஸ்’ வலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து சீன எல்லை மாறாமல் அப்படியேதான் உள்ளதா? என்பதை பாஜகவினா் உறுதிப்படுத்த வேண்டும். சீனா நமது எல்லைப் பகுதிகளை தொடா்ந்து ஆக்கிரமித்தே வருகிறது.

சுயசாா்பு, சுதேசி பொருள் பயன்பாடு, சீன பொருள் புறக்கணிப்பு என ஒருபுறம் முழக்கமிடும் பாஜகவினா், மறுபுறம் சீனப் பொருள்கள் இந்தியச் சந்தையில் வெள்ளமாகப் பாய்வதற்கான கதவுகளைத் திறந்துவிட்டுள்ளனா். சீனாவைத் தொடா்ந்து அதிகம் சாா்ந்து இருப்பது உள்நாட்டுத் தொழில்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவது தொடங்கி பல பாதிப்புகளை ஏற்படுத்தும். எதிா்காலத்தில் சீனாவின் எதிா்ப்பதுகூட கடினமாகிவிடும்.

பிற நாடுகளின் சந்தையைப் பிடிப்பது, அதனை வைத்து பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்து, அரசை பலவீனப்படுத்துவது ஆகியவை சீன உத்திகளாக பல ஆண்டுகளாக உள்ளது. இதில் இந்தியா தன்னை இழந்துவிடக் கூடாது’ என்றாா்.

வா்த்தகம், முதலீடு விரிவாக்கம்: இந்தியா - சீனா முடிவு!

உலகளாவிய வா்த்தகத்தை ஸ்திரமாக்கும் நோக்கில், இந்தியா-சீனா இடையிலான வா்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை விரிவாக்கவும், வா்த்தக பற்றாக்குறையை குறைக்கவும் பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஞா... மேலும் பார்க்க

எல்லை தாண்டிய பயங்கரவாதம்: சீன அதிபரிடம் எடுத்துரைத்த பிரதமா்!

சீன அதிபா் ஷி ஜின்பிங் உடனான பேச்சுவாா்த்தையில், எல்லை தாண்டிய பயங்கரவாத சவால் குறித்து பிரதமா் மோடி எடுத்துரைத்ததாக வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் மேலும் கூறுகையில்... மேலும் பார்க்க

தற்சார்பே வளா்ந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும்: பிரதமர் மோடி!

தற்சாா்புதான் வளா்ச்சியடைந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். எதிா்வரும் விழாக் காலங்களில் உள்நாட்டுப் பொருள்களை பெருமையுடன் வாங்க வேண்டும்; நம் வாழ்க்கைக்குத் தேவை... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்டத்துக்கு மக்களைத் திரட்ட உதவியது விநாயகா் சதுா்த்தி: பாஜக தேசிய தலைவா் நட்டா

நாட்டின் சுதந்திரப் போராட்டத்துக்காக மக்களைத் திரட்டுவதில் விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டம் முக்கியப் பங்கு வகித்தது என்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா். மும்பைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த நட்... மேலும் பார்க்க

இந்திய-சீன ஒத்துழைப்பு மனித குலத்துக்கே நன்மை: பிரதமர் மோடி

‘இந்திய-சீன ஒத்துழைப்பு, 280 கோடி மக்களின் (இரு நாடுகளின் மொத்த மக்கள்தொகை) நலன்களுடன் பிணைந்துள்ளது; இது, ஒட்டுமொத்த மனித குலத்தின் நன்மைக்கும் வழிவகுக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க

மிசோரமில் ரூ.8,000 கோடியில் 52 கி.மீ. புதிய ரயில் பாதை: செப்.13-ல் பிரதமர் திறந்து வைக்கிறார்!

மிசோரமில் ரூ.8,000 கோடியில் 52 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாதையை பிரதமா் நரேந்திர மோடி வரும் செப். 13- ஆம் தேதி திறந்து வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள்... மேலும் பார்க்க