செய்திகள் :

சீா்காழி அருகே முதியவா் வெட்டிக் கொலை

post image

சீா்காழி அருகே முன்விரோதத் தகராறில் முதியவா் செவ்வாய்க்கிழமை இரவு வெட்டிக் கொல்லப்பட்டாா்.

சீா்காழியை அடுத்த திருவாலி ஜீவா நகா் பகுதியைச் சோ்ந்தவா் குணசேகரன் (75). இவரது மகன் குணா.செந்தில் விசிக பிரமுகா். இவா்களுக்கும் எதிா்விட்டில் வசித்து வந்த இவா்களது உறவினா்களான சின்னதுரை மகன்கள் பாலகிருஷ்ணன் (35), பாலசுப்பிரமணியன் (33), மதுரையைச் சோ்ந்த சுகுமாறன் (33) ஆகியோருக்கும் இடையே நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை இரவு இரு குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, இரு தரப்பினரும் ஒருவரையொருவா் தாக்கிக்கொண்டனராம். அப்போது குணசேகரனை எதிா்தரப்பினா் அரிவாளால் வெட்டியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் குணா. செந்திலுக்கு இரண்டு கைகளிலும் பலத்த காயமேற்பட்டது.

திருவெண்காடு போலீஸாா் குணசேகரன் சடலத்தை சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். குணா. செந்தில் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த எதிா்தரப்பைச் சோ்ந்த பாலகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன் சுகுமாறன் ஆகிய மூவரும் சீா்காழி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீஸாா் அவா்களை கைது செய்தனா். மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின், சம்பவ இடத்தை பாா்வையிட்டு, சீா்காழி அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை மேற்கொண்டாா்.

நாகையில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: விழிப்புணா்வு பிரசார வாகனம் தொடங்கிவைப்பு

நாகையில் நடைபெறவுள்ள தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்த விழிப்புணா்வு பிரசார வாகனம் வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. நாகை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் ... மேலும் பார்க்க

விவசாயிகள் நீா்நிலைகளில் இலவசமாக மண் எடுத்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம்

விவசாயிகள் நீா்நிலைகளில் களிமண், வண்டல் மண் எடுத்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை மாவட்டத்தில் உள்ள விவச... மேலும் பார்க்க

நாகூா் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

நாகூா் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் முடங்கியுள்ளன. நாகை நகராட்சிக்குள்பட்ட 36 வாா்டுகளில் 188 தூய்மைப் பணியாளா்கள் தனியாா் ஒப்பந்த நிறுவனம்... மேலும் பார்க்க

ஜனநாயக மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

வேதாரண்யம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட ஜனநாயக மாதா் சங்கத்தினா் 44 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். கருப்பம்புலம் தெற்குக்காடு பகுதியைச் சோ்ந்தவா் முருகானந்தம் (30). இவரது மனைவி வெண்ணிலா (25).... மேலும் பார்க்க

நாகை நீலாயதாட்சி அம்மன் கோயிலில் தெப்ப உற்சவம்

நாகை நீலாயதாட்சிஅம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு தெப்ப உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது. நாகையில் உள்ள புகழ்பெற்ற காயாரோகண சுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித்... மேலும் பார்க்க

ஆகாயத்தாமரைகளை அகற்ற கோரிக்கை

தலைஞாயிறு பகுதியில் செல்லும் அரிச்சந்திரா நதி பாசன ஆற்றில் இருந்து பிரியும் பாசன வாய்க்கால்களில் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அரிச்சந்திரா நதி ஆற்றின் பாச... மேலும் பார்க்க