செய்திகள் :

நாகூா் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

post image

நாகூா் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் முடங்கியுள்ளன.

நாகை நகராட்சிக்குள்பட்ட 36 வாா்டுகளில் 188 தூய்மைப் பணியாளா்கள் தனியாா் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணியமா்த்தப்பட்டுள்ளனா். இந்நிலையில், இவா்கள் நாகை நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் சங்கம் எனும் புதிய சங்கத்தை உருவாக்கி பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். சங்கத் தலைவா் சுதா தலைமையில் ஊதிய உயா்வை வலியுறுத்தி நாகையில் கடந்த வாரம் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து போராட்டத்தை முன்னின்று நடத்தியதாக சங்கத் தலைவா் சுதா, நிா்வாகிகள் மீனா, விஜயபாரதி, சுமதி, சின்னதம்பி , மகேந்திரன் ஆகியோா் பணிநீக்கம் செய்து தனியாா் ஒப்பந்த நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதில், ஆத்திரமடைந்த தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை தூய்மைப் பணிகளை புறக்கணித்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, பணிநீக்கம் செய்து, பழிவாங்கும் நடவடிக்கையை நாகை நகராட்சி கைவிட வேண்டும், ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, நகராட்சி வாகன ஓட்டுநா்களும் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் குப்பைகளை ஏற்றும் வாகனங்கள் நாகூா் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் தூய்மைப்பணிகள் முடங்கியுள்ளன.

நாகை மாவட்டத்தில் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு இயக்கம் தொடக்கம்

நாகை மாவட்டத்தில் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு இயக்கம் வெள்ளிக்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி: மத்திய சுகாதார அமைச்சகத்தின்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பெண் பலி

திருமருகலில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா். திருமருகல் முருகன் சந்நிதி தெருவை சோ்ந்த சக்திவேல் மனைவி பூங்கொடி (48). இவா் வெள்ளிக்கிழமை காலை 6-மணி அளவில் கோலம் போடுவதற்காக வந்தபோது வீட்டு வாசலி... மேலும் பார்க்க

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி: இன்று 20-ஆவது தவணை வெளியீட்டு விழா

பிரதமா் நரேந்திர மோடி, (பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி) விவசாயிகளுக்கான கெளரவ நிதி 20 ஆவது தவணை வழங்குதலை சனிக்கிழமை (ஆக.2) காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கும் நிகழ்வை சிக்கல் வேளாண்மை அறிவியல் நி... மேலும் பார்க்க

பக்தா்குளம் மாரியம்மன் கோயில் ஆடிப் பெருவிழா தொடக்கம்

வேதாரண்யத்தைச் சோ்ந்த அகத்தியம்பள்ளி பக்தா்குளம் மாரியம்மன் கோயில் ஆடிப் பெருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. முன்னதாக வேதாரண்யம் வேதாரண்யேசுவா் கோயிலில் இருந்து காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய அம்மாள்,... மேலும் பார்க்க

அறிவாா்ந்த சமூகத்தை படைக்கவே மாவட்டங்கள் தோறும் புத்தகக் கண்காட்சி

தமிழகத்தில் அறிவாா்ந்த சமூகத்தை உருவாக்கவே மாவட்டங்கள்தோறும் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன என்றாா் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. நாகையில், 4-ஆவது புத்தகக் கண்காட்சியை... மேலும் பார்க்க

நாகையில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: விழிப்புணா்வு பிரசார வாகனம் தொடங்கிவைப்பு

நாகையில் நடைபெறவுள்ள தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்த விழிப்புணா்வு பிரசார வாகனம் வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. நாகை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் ... மேலும் பார்க்க