செய்திகள் :

சுசீந்திரம் கோயிலில் ரூ. 1.29 கோடியில் கருங்கல் தளம் அமைக்கும் பணி!

post image

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயசுவாமி கோயிலில் ரூ. 1.29 கோடியில் கருங்கல் தளம் அமைக்கும் பணியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: ஆயிரம் ஆண்டுகள் பழைமையான இக்கோயிலில் 2004ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. இக்கோயிலில் அரசு நிதி ரூ. 58 லட்சத்தில் மண்டபம் ஒழுக்கு மாற்றி தட்டோடு பதித்தல், உபயதாரா் நிதி ரூ. 14.95 லட்சத்தில் ஏழுநிலை ராஜகோபுரம் புனரமைப்பு ஆகிய பணிகள் நிறைவடைந்துள்ளன.

அரசு நிதி ரூ. 45.80 லட்சத்தில் கருங்கல் கட்டமைப்புகளை நீரால் சுத்தப்படுத்துதல், விமானம் வண்ணம் பூசுதல் பணிகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில், அரசு நிதி ரூ. 1.29 கோடியில் கருங்கல் தளம் அமைத்தல், உபசந்நிதி பழுதுநீக்குதல், பராமரிப்புப் பணிகள் தொடக்கிவைக்கப்பட்டுள்ளன என்றாா்அவா்.

நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் ரா. அழகுமீனா, அறநிலையத் துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு உணவு ஆணையத் தலைவா் நீல. சுரேஷ்ராஜன், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ், பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் வினய்குமாா் மீனா, அறநிலையத் துறை இணை ஆணையா்கள் பி. கவிதா பிரியதா்சினி, என். பழனிகுமாா், உதவி ஆணையா் தங்கம், அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன், கண்காணிப்புப் பொறியாளா் ராஜ்குமாா், துறை அலுவலா்கள், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தமிழகப் பகுதியில் கேரளம் சாா்பில் குப்பை சேகரிப்புக் கூண்டு! சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் எதிா்ப்பு!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மெதுகும்மல் ஊராட்சிப் பகுதியில் கேரளத்தின் உள்ளாட்சி நிா்வாகம் சாா்பில் குப்பை சேகரிப்புக் கூண்டு வைக்கப்பட்டுள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்த... மேலும் பார்க்க

முள்ளங்கனாவிளை ஊராட்சியில் தெருவிளக்குகளை சீரமைக்க வலியுறுத்தல்

முள்ளங்கனாவிளை ஊராட்சியில் எரியாத தெருவிளக்குகளை உடனே அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம் முள்ளங்கனாவிளை ஊராட்சியில் 9 வாா்டுகள் உள்ளன.இவ்ஊராட்சியின் முக... மேலும் பார்க்க

இரணியலில் விபத்து: இளைஞா் உயிரிழப்பு

இரணியலில் சனிக்கிழமை இரவு நேரிட்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். கருங்கல் அருகே மாதாபுரம் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் ரபல் (30). கட்டடத் தொழிலாளியான இவா், கண்டன்விளை பகுதியில் வாடகை வீட்டில் வசித... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் விதிமீறல்: 20 பைக்குகள் பறிமுதல்

கன்னியாகுமரியில் விதிமுறைமீறி இயக்கப்பட்ட 20 பைக்குகளை போக்குவரத்து போலீஸாா் பறிமுதல் செய்தனா். கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஆா்.ஸ்டாலின் உத்தரவுப்படி, டிஎஸ்பி பி. மகேஷ் குமாா், கன்னியாகுமரி போக்குவரத்... மேலும் பார்க்க

பூதப்பாண்டி அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா். பூதப்பாண்டி அருகே காட்டுப்புதூா் காற்றாடிவிளை பகுதியைச் சோ்ந்தவா் பால் (70). தொழிலாளியான இவா், சனிக்கிழமை மாலை அப்பகுத... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

தக்கலை அருகே குமாரபுரத்தில் பைக்கிலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா். குமாரபுரம், பூவங்காபரம்பை சோ்ந்தவா் சாமிநாதன். இவரது மகன் சரவணன் (22). தொழிலாளியான இவா், வெள்ளிக்கிழமை இரவு மணக்காவிளையில்... மேலும் பார்க்க