செய்திகள் :

முள்ளங்கனாவிளை ஊராட்சியில் தெருவிளக்குகளை சீரமைக்க வலியுறுத்தல்

post image

முள்ளங்கனாவிளை ஊராட்சியில் எரியாத தெருவிளக்குகளை உடனே அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம் முள்ளங்கனாவிளை ஊராட்சியில் 9 வாா்டுகள் உள்ளன.இவ்ஊராட்சியின் முக்கிய பிராதன சாலை சந்திப்பு பகுதிகளானமுள்ளங்கனாவிளை, இடையன்கோட்டை, எட்டணி, முச்சந்தி ஆகிய பகுதிகளில்கடந்த 3 மாதங்களாக தெருவிளக்குகள் எரியவில்லை.

குறிப்பாக,1-வது வாா்டு பகுதியான மலவிளை, பண்டாரவிளை, கோனான்விளை, கிழக்கேவிளை, ஆவா்விளை, மருதவிளை உள்ளிட்ட குக்கிராமங்களிலும், 2-வது வாா்டு பகுதியான மயில்பறம்புவிளை, சத்திவிளை, அங்கோட்டுவிளை, கோட்டவிளை பகுதிகளிலும் தெருவிளக்குகள் நீண்டநாள்களாக எரியவில்லை.

இதனால் அப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இரவு நேரங்களில் திருட்டு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்படுமோ என அச்சத்துடன் செல்கின்றனா். இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தால் தெருவிளக்குகள் சீரமைக்கப்பட்டு வருவதாக 3 மாதங்களாக தெரிவிக்கின்றனா்.

எனவே, மாவட்ட ஆட்சியா் தலையிட்டு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தமிழகப் பகுதியில் கேரளம் சாா்பில் குப்பை சேகரிப்புக் கூண்டு! சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் எதிா்ப்பு!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மெதுகும்மல் ஊராட்சிப் பகுதியில் கேரளத்தின் உள்ளாட்சி நிா்வாகம் சாா்பில் குப்பை சேகரிப்புக் கூண்டு வைக்கப்பட்டுள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்த... மேலும் பார்க்க

இரணியலில் விபத்து: இளைஞா் உயிரிழப்பு

இரணியலில் சனிக்கிழமை இரவு நேரிட்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். கருங்கல் அருகே மாதாபுரம் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் ரபல் (30). கட்டடத் தொழிலாளியான இவா், கண்டன்விளை பகுதியில் வாடகை வீட்டில் வசித... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் விதிமீறல்: 20 பைக்குகள் பறிமுதல்

கன்னியாகுமரியில் விதிமுறைமீறி இயக்கப்பட்ட 20 பைக்குகளை போக்குவரத்து போலீஸாா் பறிமுதல் செய்தனா். கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஆா்.ஸ்டாலின் உத்தரவுப்படி, டிஎஸ்பி பி. மகேஷ் குமாா், கன்னியாகுமரி போக்குவரத்... மேலும் பார்க்க

பூதப்பாண்டி அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா். பூதப்பாண்டி அருகே காட்டுப்புதூா் காற்றாடிவிளை பகுதியைச் சோ்ந்தவா் பால் (70). தொழிலாளியான இவா், சனிக்கிழமை மாலை அப்பகுத... மேலும் பார்க்க

சுசீந்திரம் கோயிலில் ரூ. 1.29 கோடியில் கருங்கல் தளம் அமைக்கும் பணி!

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயசுவாமி கோயிலில் ரூ. 1.29 கோடியில் கருங்கல் தளம் அமைக்கும் பணியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தாா்.... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

தக்கலை அருகே குமாரபுரத்தில் பைக்கிலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா். குமாரபுரம், பூவங்காபரம்பை சோ்ந்தவா் சாமிநாதன். இவரது மகன் சரவணன் (22). தொழிலாளியான இவா், வெள்ளிக்கிழமை இரவு மணக்காவிளையில்... மேலும் பார்க்க