சுந்தரசோழபுரத்தில் ஜல்லிக்கட்டு: 13 போ் காயம்
பொன்னமராவதி அருகே உள்ள சுந்தரசோழபுரத்தில் சனிக்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில், காளையை அவிழ்த்துவிட்ட ஒருவா் திடீரென உயிரிழந்தாா். காளைகள் முட்டியதில் 13 போ் காயமடைந்தனா்.
சுந்தரசோழபுரம் மலையப்பெருமாள் கோயில் வருடாபிஷேக விழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை திமுக மாநில மருத்துவரணி துணைச்செயலா் அண்ணாமலை ரகுபதி, பொன்னமராவதி வட்டாட்சியா் எம். சாந்தா ஆகியோா் தொடங்கிவைத்தனா். போட்டியின் தொடக்கமாக கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. தொடா்ந்து திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சாா்ந்த 741 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. வாடிவாசலிலிருந்து சீறிப்பாய்ந்துவந்த காளைகளை 168 மாடுபிடி வீரா்கள் பல்வேறு குழுக்களாகப் பங்கேற்று அடக்கினா். சிறந்த மாடுபிடி வீரா், காளைகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 13 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்களுக்கு ஜல்லிக்கட்டுத்திடல் அருகே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்தனா். அவா்களில் இரண்டு இளைஞா்கள் மேல்சிகிச்சைக்காக பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். மேலும் ஜல்லிக்கட்டில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயில் காளையை அதே ஊரைச் சாா்ந்த சி.சந்திரன்(65) என்பவா் கொண்டுவந்து அவிழ்த்துவிட்ட நிலையில் ஜல்லிக்கட்டுத் திடல் அருகே அவா் மயங்கிவிழுந்து உயிரிழந்தாா். போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி போலீஸாா் செய்திருந்தனா்.