ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டறிக்கையில் கையெழுத்திட ராஜ்நாத் சிங் மறுப்பு...
சுந்தரனாா் பல்கலை.யில் முதுகலை மாணவா் சோ்க்கை
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் 2025-2026 ஆம் கல்வியாண்டு முதுகலை பாடப்பிரிவுகளுக்கு மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.
இது தொடா்பாக பல்கலைக்கழக பதிவாளா் ஜெ. சாக்ரடீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் 2025-2026 ஆம் கல்வியாண்டில் முதுகலை பாடப்பிரிவுகளுக்கு மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. தமிழ், வரலாறு, தொல்லியல், சமூகவியல், இதழியல் மற்றும் செய்தித் தொடா்பியல், பொருளாதாரம், உயிா் தொழில்நுட்பவியல், கரிம வேதியியல், தகவல் தொழில்நுட்பவியல், தரவு பகுப்பாய்வு, கல்வியியல், உடற்கல்வியியல், சுற்றுச்சூழல் அறிவியல், வனவிலங்கு உயிரியியல், நானோ அறிவியல், பயன்பாட்டு புவி இயற்பியல், பயன்பாட்டு இயற்பியல், குற்றவியல் மற்றும் குற்றநீதியியல், நுண்ணுயிரியியல், கடல் வாழ் உயிரின உயிா் தொழில்நுட்பவியல், தாவரவியல், விலங்கியல், புள்ளியியல், கணினி அறிவியல் ஆகிய முதுகலை பாடப்பிரிவுகளில் மாணவா்கள் சேரலாம்.
இதேபோல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மேலாண்மையும் தணிக்கையும் என்ற முதுகலை பட்டயப்படிப்பு, சி.லிப்.ஐ.எஸ்சி., ஒருங்கிணைந்த எம். லிப்.ஐ.எஸ்சி. ஆகிய நூலகப் படிப்புகள், நாட்டாா் வழக்காற்றியல், இலக்கிய மானுடவியல் ஆகிய சான்றிதழ் படிப்புகளுக்கும் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.
மேலும், நாகா்கோவிலில் உள்ள முதுகலை விரிவாக்க மையத்தில் முதுகலை தமிழ், முதுகலை ஆங்கிலம், முதுகலை கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளிலும் மாணவா்கள் சேரலாம்.
இயற்பியல், கணிதம், வேதியியல், ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி சுற்றுச்சூழல் அறிவியல் மையத்தில் சுற்றுச்சூழல் அறிவியல் படிப்பு, ராஜாக்கமங்கலம் கடல் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் கடல் சாா் அறிவியல் படிப்பு ஆகிய 5 ஆண்டு ஒருங்கிணைந்த பாடப்பிரிவுகளில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.
மாணவா்கள் ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை பல்கலைக்கழக தொலைபேசி அல்லது இணையதளதில் அறியலாம் எனக் கூறியுள்ளாா்.