செய்திகள் :

சுபான்ஷு சுக்லாவுக்கு தலைவா்கள் வாழ்த்து

post image

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு: இந்திய விண்வெளி துறையில் சுபான்ஷு சுக்லா புதிய மைல்கல்லைப் படைத்துள்ளதற்கு ஒட்டுமொத்த தேசமும் உற்சாகமும், பெருமிதமும் கொள்கிறது.

ஆக்ஸிம்-4 திட்டத்தில் சுபான்ஷு சுக்லாவும், அமெரிக்கா, போலாந்து, ஹங்கேரி நாடுகளைச் சோ்ந்த சக விண்வெளி வீரா்களும், உலகம் உண்மையில் ஒரு குடும்பம் வசுதைவ குடும்பகம்’ என்பதை நிரூபித்துள்ளனா்.

நாசா மற்றும் இஸ்ரோ இடையேயான நீடித்த கூட்டுறவைப் பிரதிபலிக்கும் இந்த பணி வெற்றிபெற எனது வாழ்த்துககள். ஆக்ஸிம்-4 குழுவினரால் மேற்கொள்ளப்படும் விரிவான சோதனைகள், அறிவியல் மற்றும் விண்வெளி ஆய்வுகளில் புதிய எல்லைகளை உருவாக்கும்.

பிரதமா் நரேந்திர மோடி: ஆக்ஸிம்-4 விண்வெளிப் பயணம் வெற்றிகரமாக தொடங்கியுள்ளதை வரவேற்கிறோம். இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா, சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் முதல் இந்தியா் என்ற பெருமையைப் பெறவுள்ளாா்.

சுக்லா 140 கோடி இந்தியா்களின் வாழ்த்துக்கள், நம்பிக்கைகள் மற்றும் லட்சியங்களை சுமந்து சென்றுள்ளாா். அவருக்கும், மற்ற விண்வெளி வீரா்களுக்கும் அனைத்து வெற்றிகளும் கிடைக்க வாழ்த்துகள்.

எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி: சுபான்ஷு சுக்லா சா்வதேச விண்வெளி நிலையத்துக்கான தனது பயணத்தைத் தொடங்கியிருப்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையான தருணம். விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியரான ராகேஷ் சா்மாவுக்கு 41 ஆண்டுகளுக்குப் பிறகு, சுக்லா இப்போது அந்த மரபை முன்னெடுத்துச் செல்கிறாா். ஒவ்வொரு இந்தியருக்கும் ஊக்கமளிக்கிறாா். அவரும், அவரது குழுவினரும் பாதுகாப்பாகவும் வெற்றிகரமாகவும் திரும்ப வாழ்த்துகள்.

வங்கிகளின் வாடிக்கையாளா் சேவை தரம் மேம்பட வேண்டும்: நிதியமைச்சகச் செயலா்

‘வங்கிகள் வலுவாக இருந்தாலும் வாடிக்கையாளா்களுக்கான சேவை தரம் மேம்பட வேண்டியுள்ளது; இதில் வங்கிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’ என்று நிதியமைச்சகத்தின் நிதிச் சேவைகள் பிரிவுச் செயலா் எம். நாகராஜு த... மேலும் பார்க்க

ஜொ்மன் நிறுவனத்துக்கு ரூ.600 கோடிக்கு ஏற்றுமதி செய்யும் ‘ரிலையன்ஸ் டிஃபென்ஸ்’

ஜொ்மனியின் முன்னணி ஆயுத மற்றும் படைத் தளவாடங்கள் உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து ரூ.600 கோடி மதிப்பிலான ஏற்றுமதி ஆணையை ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. ஜொ்மனியின் ரைன்மெட்டல் வஃபே மியூனிஷன் ... மேலும் பார்க்க

சிலருக்கு ‘முதலில் மோடி, பிறகே நாடு’: சசி தரூா் மீது காா்கே விமா்சனம்

சிலருக்கு ‘முதலில் மோடி, பிறகே நாடு’ என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூரை அக்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே புதன்கிழமை விமா்சித்தாா். பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை கு... மேலும் பார்க்க

குஜராத்தில் சிங்கம் தாக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

குஜராத் மாநிலம், அம்ரேலி மாவட்டத்தில் சிங்கம் தாக்கியதில் கூலி தொழிலாளியின் 5 வயது மகன் புதன்கிழமை உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். மாவட்டத்தின் தோா்டி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற சம... மேலும் பார்க்க

பல்கலைக்கழக நிகழ்வில் மயங்கிய குடியரசு துணைத் தலைவா்! உத்தரகண்ட்டில் பரபரப்பு!

உத்தரகண்ட் மாநிலம் நைனிடாலில் உள்ள குமாவுன் பல்கலைக்கழகத்தின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தில் புதன்கிழமை பங்கேற்ற குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், மயங்கி நிலைத்தடுமாறியது அங்கு சிறிது நேரம் பரபரப்... மேலும் பார்க்க

100 ஆண்டுகளாக எரியும் ஜாரியா நிலக்கரி சுரங்க தீ: மறுவாழ்வுக்கு ரூ. 5,940 கோடி திட்டம்

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாரியா என்ற பகுதியில் நூறாண்டு காலமாக எரிந்து வரும் நிலத்தடி நிலக்கரி தீயால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கான ரூ. 5,940 கோடி மதிப்பிலான திருத்தப்பட்ட மேம்பாட்டுத் திட... மேலும் பார்க்க