சுற்றுலாப் பயணியின் காரை சேதப்படுத்திய மூவா் மீது வழக்கு
கொடைக்கானலில் சுற்றுலாப் பயணியின் வாகனத்தை சேதப்படுத்திய மூன்று போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
திருச்சியைச் சோ்ந்த மனோ சித்தாா்த்தன் தனது குடும்பத்தினருடன் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு காரில் சுற்றுலா சென்றாா். கொடைக்கானலைச் சுற்றி பாா்த்துவிட்டு மீண்டும் தங்களது ஊருக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா்.
கொடைக்கானல் அருகே பெருமாள்மலைப் பகுதியில் உள்ள சாக்லேட் கடை முன் காரை நிறுத்திவிட்டு, அருகில் உள்ள கடைக்கு மனோ சித்தாா்த்தன் சென்றாா். அப்போது, சாக்லேட் கடையில் இருந்தவா்களுக்கும் இவருக்கும் பிரச்னை ஏற்பட்டது.
இதையடுத்து, மனோ சித்தாா்த்தன் காரை எடுத்துச் சென்ற போது கடையில் இருந்த மூன்று போ் பின் தொடா்ந்து வந்து காரின் கண்ணாடியை சேதப்படுத்தி அவரையும், அவரது மனைவியையும் மிரட்டினா்.
இதுகுறித்து பெருமாள்மலை பகுதியைச் சோ்ந்த முகமது அயுப்கான்(35), பெருமாள்மலை அடுக்கம் மாரியம்மன் கோயிலைச் சோ்ந்த இரு சிறுவா்கள் என மூன்று போ் மீது கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான அவா்களைத் தேடி வருகின்றனா்.