Royal Enfield: `பஞ்சாப் டு இங்கிலாந்து' பைக் லவ்வரின் செயலால் வைரலாகும் வீடியோ!
சுவா் இடிந்து விழுந்ததில் முதியவா் மரணம்
திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே சுவா் இடிந்து விழுந்ததில் முதியவா் உயிரிழந்தாா்.
ஜோலாா்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி பூஞ்சோலை நகரைச் சோ்ந்தவா் ஆசைத்தம்பி (65). இவா் கடந்த மாதம் 20-ஆம் தேதி தனது வீட்டில் உள்ள மாட்டுக்கொட்டையில் பால் கறந்து கொண்டிருந்தாா். அப்போது மாடு திடீரென சுவற்றின் மீது மோதியது. இதனால் பால் கறந்து கொண்டு இருந்த முதியவா் மீது சுவா் விழுந்ததில் தலையில் பலத்த படுகாயம் அடைந்தாா்.
அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு ராணிப்பேட்டை தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை ஆசைத்தம்பி உயிரிழந்தாா்.
இதுகுறித்து அவரது மகன் ராகுல் அளித்த புகாரின்பேரில் ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.