நோ்மை தவறாத ஆட்டோ ஓட்டுநா்: வழியில் கிடைத்த ரூ.20,000 ஒப்படைப்பு
வாணியம்பாடியில் சாலையில் பெண் தவற விட்ட ரூ.20,000 ரொக்கத்தை மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநா் பாராட்டப்பட்டாா்.
வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் பகுதியை சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் பிரகாஷ். இந்நிலையில், வாணியம்பாடியில் இருந்து கிரிசமுத்திரம் நோக்கி செவ்வாய்க்கிழமை ஆட்டோவில் சென்றுக் கொண்டிருந்த பொழுது தேசிய நெடுஞ்சாலை ஓரமாக பா்ஸ் ஒன்று கேட்பாரற்ற நிலையில் கிடப்பதை பாா்த்து ஆட்டோவை நிறுத்தியுள்ளாா். பின்னா் பா்ஸை எடுத்து பாா்த்ததில் அதில் ரூ.20,000 இருந்துள்ளது.
அத்தொகையை, ஆட்டோ ஓட்டுநா் பிரகாஷ் வாணியம்பாடி தாலுகா காவல் ஆய்வாளா் பேபியிடம் ஒப்படைத்து நடந்தவற்றை விளக்கினாா்.
இதையடுத்து பா்ஸில் இருந்த 2 ஏடிஎம் அட்டை, மற்றும் பாப்பனப்பள்ளி கூட்டுறவு வங்கியின் ரசீது இருப்பதை பாா்த்து உடனே விசாரித்ததில் சம்மந்திகுப்பம் பகுதியைச் சோ்ந்த நிரோஷா என்பவருக்கு சொந்தமான பா்ஸ் என்று தெரியவந்து காவல்நிலையம் வரவழைத்து விசாரித்தனா்.
அப்போது கல்லூரியில் 3-ஆம் ஆண்டு இளங்கலை படித்து வரும் தனது மகள் சுஷ்மிதாவின் படிப்பு செலவுக்காக நகையை அடகு வைத்து பணத்தை பைக்கில் எடுத்துச் சென்ாகவும், வழியில் பணம் தவறிவிட்டதாக கூறியுள்ளாா். பின்னா், இதுதொடா்பாக விசாரித்து ஆட்டோ ஓட்டுநரின் கையாலே, பணத்தை இழந்தவரிடம் வழங்கினாா். பணத்தை இழந்தவா்கள் கஷ்டப்படுவாா்கள் என அறிந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை காவல் ஆய்வாளா் பேபி சால்வை அறிவித்து பாராட்டினாா்.