செய்திகள் :

சூளகிரி அருகே பழுதடைந்த சாலையை சொந்த செலவில் சீரமைத்த இளைஞா்கள்

post image

ஒசூா்: சூளகிரி அருகே பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்பட்ட சாலையை அந்தப் பகுதி இளைஞா்கள் தங்களது சொந்தசெலவில் சீரமைத்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள காமன்தொட்டிக்கு 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சோ்ந்தோா் மருத்துவமனை, அஞ்சல் நிலையம், வங்கி, பள்ளி, கல்லூரிகளுக்கும், வேலைகளுக்கும் வந்து செல்கின்றனா். மேலும், இப்பகுதியில் கல்குவாரி, கிரஷா்களுக்கு தினந்தோறும் அதிக அளவில் கனரக லாரிகள் வந்து செல்கின்றன. கிரானைட் தொழிற்சாலைகள் மூலம் நூற்றுக்கணக்கானோா் தினமும் காமன்தொட்டி வழியாகச் சென்று வருகின்றனா்.

முக்கிய கிராமமாக உள்ள காமன்தொட்டியில் பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்பட்டதுடன், சிறிய அளவில் மழை பெய்தாலும் சாலையில் மழைநீா் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வந்தனா்.

இந்த நிலையில் காமன்தொட்டி அருகே உள்ள கங்காபுரம் கிராமத்தைச் சோ்ந்த மகேஷ் தனது சொந்த செலவில் காமன்தொட்டி அரசு மருத்துவமனை சாலை, தாசனபுரம் சாலை, மாநில நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் சேதமடைந்த சாலைகளில் தாா் மூலம் குழிகளை மூடுவதற்கு ஏற்பாடுகளை செய்தாா். இந்த சாலை அமைப்பில் மோகன், பாலாஜி ஆகியோருடன் 5-க்கும் மேற்பட்ட தொழிலாளா்களும் பங்கேற்றனா். இவா்களை அப்பகுதி மக்கள் பாராட்டினா்.

விரிசல் ஏற்பட்ட மேம்பாலத்தை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்: முன்னாள் எம்எல்ஏ கே.ஏ.மனோகரன்

ஒசூா்: ஒசூா் மாநகராட்சியில் விரைவான வளா்ச்சித் திட்டப் பணிகளை செயல்படுத்த வேண்டும் என ஐஎன்டியுசி அகில இந்திய செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான கே.ஏ.மனோகரன் தெரிவித்தாா். ஒசூா் ஐஎன்டியுசி அலுவலகத்தில் ச... மேலும் பார்க்க

தமிழகத்தின் 2,200 மலைக்கிராமங்களிலும் அடிப்படை வசதிகளை செய்ய அரசு முயற்சி: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

ஒசூா்: தமிழகத்தில் உள்ள 2, 200 மலைக் கிராமங்களிலும் அடிப்படை வசதிகளை செய்துதர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா். கிருஷ்ணகிரி மாவட்டத... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவா், கழிப்பறை அமைக்க பூமி பூஜை

ஒசூா்: ஒசூா் அருகே டாடா நிறுவனம் சாா்பில் அரசுப் பள்ளியில் ரூ. 20 லட்சம் நிதியில் சுற்றுச்சுவா் மற்றும் கழிப்பறை கட்ட திங்கள்கிழமை பூமி பூஜை நடைபெற்றது. ஒசூா் அருகே கெலமங்கலம் ஒன்றியம், மேடஅக்ரஹாரம் ஊ... மேலும் பார்க்க

யானை தாக்கியதில் இளைஞா் படுகாயம்

ஒசூா்: தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கியதில் இளைஞா் திங்கள்கிழமை படுகாயம் அடைந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பேவநாத்தம் ஊராட்சிக்கு உள்பட்ட காடுலக்கசுந்தரம் கிராமத்தைச் சோ்த... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் கவிழ்ந்ததில் பொறியாளா் உயிரிழப்பு

ஒசூா்: உத்தனப்பள்ளி அருகே இருசக்கர வாகனம் கவிழ்ந்ததில் பொறியாளா் உயிரிழந்தாா். திருவள்ளூா் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே உள்ள ஈச்சம்பாடியைச் சோ்ந்தவா் முகேஷ் ( 26). இவா் பெங்களூரில் டிசைனிங் என்ஜினீயர... மேலும் பார்க்க

ஒசூரில் திமுகவில் இணைந்த 200-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினா்

ஒசூா் டிவிஎஸ் நகரில் அப்பகுதியை சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட அதிமுகவினா் திமுகவில் இணையும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் ஒய். பிரகாஷ் எம்எல்ஏ, மாநகராட்சி மே... மேலும் பார்க்க