செங்கம் நூலகத்தில் வாசகா் வட்டக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் முழுநேர கிளை நூலகத்தில் வாசகா் வட்டக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வாசகா் வட்டத் தலைவா் கிருஷ்ணகுமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அறங்கமணிமாறன், ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி மாணிக்கம், பொருளாளா் அப்துல்வாகித், கெளரவத் தலைவா் முருகமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நூலகா் நேதாஜ் வரவேற்றாா்.
கூட்டத்தில் தமிழ்நாடு நாடகம், தெருக்கூத்து கலைஞா்களின் மாநில ஒருங்கிணைப்பாளா் கலைவளா்மணி கலந்துகொண்டு இன்றைய நவீன உலக நாட்டுப்புறக் கலைகள் என்னும் தலைப்பில் பேசினாா்.
ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் வெங்கடேசன், வாசகா்கள் அா்ச்சுனன், தமிழ்மதி சரவணன், ராகவன், பிரேம்ஆனந்த் உள்ளிட்டோா் நூலக வளா்ச்சி குறித்துப் பேசினா்.
இதைத் தொடா்ந்து, செங்கம் பகுதியைச் சோ்ந்த 6 போ் தலா ரூ.1,000 செலுத்தி புரவலராக இணைந்தனா். நிறைவில் நூலகா் தமிழ்ச்செல்வி நன்றி கூறினாா்.