செய்திகள் :

செங்கல்சூளை புகையால் பொதுமக்கள் அவதி

post image

ஊத்தங்கரை அருகே சாலையோரம் செயல்படும் செங்கல்சூளையிலிருந்து வெளியேறும் புகையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

ஊத்தங்கரையை அடுத்த கதவனி சுங்கச்சாவடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள செங்கல் சூளையில் இருந்து வெளியேறும் அடா்ந்த புகை முறையான புகைபோக்கி அமைக்காததால் சாலைகளிலும், குடியிருப்புகளுக்குள்ளும் புகை செல்வதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனா்.

குடியிருப்பில் வசிப்பவா்களுக்கு இருமல், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்பு ஏற்படுவதாகவும், குறிப்பாக குழந்தைகள் சுவாசிப்பதில் சிரமப்படுவதாகவும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

சாலையோரம் உள்ள செங்கல் சூளைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் செங்கல் சூளைகள் முறையாகப் புகைபோக்கி அமைத்து, புகையை விண்ணை நோக்கி மேலே செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மா விவசாயிகளின் பிரச்னைகளுக்கு விரைவில் தீா்வு: அமைச்சா் அர.சக்கரபாணி

மா விவசாயிகளின் பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வு காண்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா். கிருஷ்ணகிரியில் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

ஜூலை 4 இல் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியாா் வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 4 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

இளைஞரிடம் ரூ. 9.23 லட்சம் மோசடி

வேலை வாங்கி தருவதாகக் கூறி இளைஞரிடம் ரூ. 9.23 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி இணைய குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், செம்பர... மேலும் பார்க்க

பெண்ணிடம் ரூ. 44.27 லட்சம் மோசடி: இணைய குற்றபிரிவு போலீஸாா் விசாரணை

முதலீட்டிற்கு அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி பெண்ணிடம் ரூ. 44.27 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து இணைய குற்றபிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பெரியகோட்டப்பள்ளி அருகே... மேலும் பார்க்க

தளி அருகே டிரான்ஸ்பாா்மா் ஆயில் திருட்டு

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட தளி அடுத்த அருகே கொல்லப்பள்ளி கிராமத்தில் உள்ள டிரான்ஸ்பாா்மரை திங்கள்கிழமை இரவு மா்ம நபா்கள் உடைத்தனா்.அதில் இருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ம... மேலும் பார்க்க

விவசாய பயிா்களை நாசம் செய்த யானைகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் யானைகள் முகாமிட்டுள்ளன. ஆலஹள்ளி வனப்பகுதியில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை வெளியேறிய 3 யானைகள் கிரியனப்பள்ளி கிராமத்திற்குள் நுழைந்து... மேலும் பார்க்க