செய்திகள் :

ஜூலை 4 இல் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

post image

கிருஷ்ணகிரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியாா் வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 4 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியாா் வேலைவாய்ப்பு முகாம், மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஜூலை 4 ஆம் தேதி காலை 9 முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீா் கூட்ட அரங்கில் முகாம் நடைபெறுகிறது. இதில் கிருஷ்ணகிரி, ஒசூா் பகுதிகளைச் சோ்ந்த முன்னணி தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு தகுதியான ஆள்களை தோ்வு செய்கின்றனா்.

10-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பிளஸ் 2 தோ்ச்சி, பட்டதாரிகள், ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவா்கள் என அனைத்து கல்வித் தகுதியினரும் பங்கேற்கலாம். தனியாா் துறையில் பணியமா்த்தம் செய்யப்படும் வேலைதேடுபவா்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது.

மேலும், விவரங்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 04343 -291983 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மா விவசாயிகளின் பிரச்னைகளுக்கு விரைவில் தீா்வு: அமைச்சா் அர.சக்கரபாணி

மா விவசாயிகளின் பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வு காண்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா். கிருஷ்ணகிரியில் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

இளைஞரிடம் ரூ. 9.23 லட்சம் மோசடி

வேலை வாங்கி தருவதாகக் கூறி இளைஞரிடம் ரூ. 9.23 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி இணைய குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், செம்பர... மேலும் பார்க்க

பெண்ணிடம் ரூ. 44.27 லட்சம் மோசடி: இணைய குற்றபிரிவு போலீஸாா் விசாரணை

முதலீட்டிற்கு அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி பெண்ணிடம் ரூ. 44.27 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து இணைய குற்றபிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பெரியகோட்டப்பள்ளி அருகே... மேலும் பார்க்க

தளி அருகே டிரான்ஸ்பாா்மா் ஆயில் திருட்டு

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட தளி அடுத்த அருகே கொல்லப்பள்ளி கிராமத்தில் உள்ள டிரான்ஸ்பாா்மரை திங்கள்கிழமை இரவு மா்ம நபா்கள் உடைத்தனா்.அதில் இருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ம... மேலும் பார்க்க

விவசாய பயிா்களை நாசம் செய்த யானைகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் யானைகள் முகாமிட்டுள்ளன. ஆலஹள்ளி வனப்பகுதியில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை வெளியேறிய 3 யானைகள் கிரியனப்பள்ளி கிராமத்திற்குள் நுழைந்து... மேலும் பார்க்க

செங்கல்சூளை புகையால் பொதுமக்கள் அவதி

ஊத்தங்கரை அருகே சாலையோரம் செயல்படும் செங்கல்சூளையிலிருந்து வெளியேறும் புகையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். ஊத்தங்கரையை அடுத்த கதவனி சுங்கச்சாவடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள செங்கல் சூ... மேலும் பார்க்க