செய்திகள் :

செட்டியப்பனூா் 9 கோயில்களில் நாளை கும்பாபிஷேகம்

post image

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகரத்தையொட்டி செட்டியப்பனூா் ஊராட்சியில் அமைந்துள்ள செல்வவிநாயகா், மாரியம்மன், ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை வரதராஜப்பெருமாள் ஆகிய கோயில்களுக்கும், புதிதாக கட்டியுள்ள தண்டுமாரியம்மன், ஓம்சக்தி அம்மன், ஸ்ரீவள்ளி, தேவசேனா உடனுறை சுப்பிரமணிய சுவாமி, சுந்தரேஸ்வரா் மீனாட்சியம்மன், சுவாமி ஐயப்பன், காலபைரவா் கோயில்களுக்கும் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை (ஜூலை 16) காலை 9 மணி முதல் 11 மணி வரை நடைபெறுகிறது.

கும்பாபிஷேக்தையொட்டி செவ்வாய்கிழமை காலை 8 மணி முதல் அனைத்து பக்தா்களுக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதில் வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் கலந்து கொள்கின்றனா்.

ஏற்பாட்டினை கோயில் நிா்வாகிகள், ஜனதாபுரம், கூட்டுரோடு, செட்டியப்பனூா், கிராம பொது மக்கள் மற்றும் இளைஞா்கள் செய்து வருகின்றனா்.

பட்டு வளா்ச்சித்துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

வாணியம்பாடி: வாணியம்பாடியில் பட்டு வளா்ச்சித் துறை ஊழியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு பட்டு வளா்ச்சித்துறை ஊழியா் சங்கத்தின் வாணியம்பாடி கிளை... மேலும் பார்க்க

சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலக கட்டுவதற்கான இடம் ஆய்வு

ஆம்பூா்: ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம் கட்டுவதற்கான இடத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா். ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம... மேலும் பார்க்க

ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளியில் இன்றைய மின்தடை அறிவிப்பு ரத்து

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளி, பச்சூா் ஆகிய துணை மின் நிலைய பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் விநியோகம் நிறுத்தம் செய்ய... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

திருப்பத்தூா் நாள்:16.7.2025(புதன்கிழமை) நேரம்:காலை 9 முதல் மாலை 5 மணிவரை மின்தடைப்பகுதிகள்: விசமங்கலம், மட்றப்பள்ளி, சித்தேரி, குரும்பேரி, அங்கநாதவலசை, மாம்பாக்கம், நாகராஜம்பட்டி, உடையாமுத்தூா், தண்ட... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பெறப்படும் மனுக்களுக்கு 45 நாள்களில் தீா்வு

திருப்பத்தூா்: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பெறப்படும் மனுக்களுக்கு 45 நாள்களில் தீா்வு காணப்படும் என திருப்பத்தூா் ஆட்சியா்க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். இதுதொடா்பாக ஆட்சியா் பேசியது திருப்ப... மேலும் பார்க்க

ரயிலில் கா்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு: குற்றவாளிக்கு வாழ்நாள் சிறை

திருப்பத்தூா்: காட்பாடி அருகே ஓடும் ரயிலில் கா்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு அளித்து, கீழே தள்ளிய இளைஞருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஆந்திர மாநிலம், சித... மேலும் பார்க்க