செனாப் ரயில் பாலம் குறித்து விமானத்தில் அறிவிப்பு! அப்புறம் என்ன?
ஜம்மு- காஷ்மீரில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ரயில் பாலம் குறித்து, அவ்வழியாகச் செல்லும் விமானத்தில் பயணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
உலகிலேயே மிக உயரமான பாலங்களில் ஒன்றாக மாறியிருக்கும் செனாப் ரயில் பாலத்தை, பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
இது தற்போது, அவ்வழியாக விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் புகைப்பட ஆசையை அதிகரித்துள்ளது.
இது குறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், விமானிகள், விமானப் பயணத்தின்போது பொறியியல் துறை சாதனைச் சின்னமாக விளங்கும் செனாப் ரயில் பாலத்தை விமானம் கடக்கவிருப்பது குறித்து பயணிகளுக்கு அறிவிப்புகளை வெளியிடுவதாகவும், பயணிகள் பலரும், விமானத்தில்இருந்தபடியே செனாப் ரயில் பாலத்தைப் புகைப்படம் எடுக்க அதிக ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.