செய்திகள் :

சென்னை: ஐபிஎல் சூதாட்டம்; மூன்று பேர் சிக்கிய பின்னணி

post image

சென்னையில் ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டம் நடப்பதாக கீழ்ப்பாக்கம் துணை கமிஷனரின் தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸார் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவரை முதலில் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்களின் பெயர் ஆகாஷ் ஜெயின், ஆகாஷ்குமார் எனத் தெரியவந்தது. இதில் ஆகாஷ் ஜெயின் சவுகார்பேட்டையில் பிசினஸ் செய்து வருகிறார். அதைப் போல ஆகாஷ்குமார், மின்ட் பகுதியில் அழகு பொருள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர்கள் இருவரும் சிறுவயது முதல் நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

கைது

இந்தநிலையில் பிசினஸோடு நகை சீட்டு ஒன்றையும் ஆகாஷ்குமார் நடத்தி வருகிறார். அதில் வேப்பேரியைச் சேர்ந்த சுரேஷ் குமார் என்பவர் சேர்ந்திருக்கிறார். அதனால் ஆகாஷ் குமார், ஆகாஷ் ஜெயின், சுரேஷ் ஆகியோர் நண்பர்களாகியிருக்கிறார்கள்.

இந்தநிலையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட மூன்று பேரும் முடிவு செய்திருக்கிறார்கள். அதன்படி ஆகாஷ் ஜெயின் 50,000 ரூபாயை சுரேஷிடம் கொடுத்திருக்கிறார். அந்தப் பணத்தை சுரேஷ், ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்ட இணையதளத்தில் பதிவு செய்து 4,000 பாயின்ட்ஸ்களை வாங்கியிருக்கிறார்.

பின்னர் அந்த இணையதளம் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் இவர்கள் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்த போலீஸார் ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக விசாரித்து வருகிறார்கள்.

தாயில்லாத நேரத்தில் 15 வயது குழந்தையை நேர்ந்த கொடூரம் - புதுச்சேரியில் அதிர்ச்சி

புதுச்சேரி முத்தியால்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் பூவரசன். 45 வயதான இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில் வேறு ஒரு பெண்ணுடன் இவர் திருமண தாண்டிய உறவில் இருந்து வந்தி... மேலும் பார்க்க

திருப்பூர்: தலை நசுக்கப்பட்டு இளம்பெண் படுகொலை; தீவிர விசாரணையில் இறங்கிய போலீஸ்; நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பூம்புகார் நகர் குடியிருப்பில் உள்ள காலி இடத்தில் இளம்பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதாக அந்தப் பகுதி பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.அத்தகவலின் பேரி... மேலும் பார்க்க

சென்னை: கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை; தனியார் வங்கி ஊழியர் சிக்கியது எப்படி?

சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த 19 வயதாகும் பெண் ஒருவர், கண் மருத்துவமனை கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு லேப் டெக்னிஷியன் படிப்பைப் படித்து வருகிறார்.இவர் கடந்த 25-ம் தேதி கல்லூரி முடிந்து வீட்டுக்க... மேலும் பார்க்க

`குடிபோதைக்கு அடிமை'; தங்க நகைக்காக தங்கையை கொன்ற வாலிபருக்கு தூக்குத் தண்டனை - நடந்தது என்ன?

புதுக்கோட்டை மாவட்டம், பெருந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். (வயது: 32). எந்த வேலைக்கும் செல்லாமல் குடிப்போதைக்கு அடிமையான இவர், தங்க நகைக்காகத் தனது சொந்தச் சித்தி மகளான லோகப்பிரியா என்ற இளம்பெண்... மேலும் பார்க்க

தொழிலதிபர்களிடம் கைவரிசை; பதுங்கியிருந்த மோசடி மன்னன் - சிக்கவைத்த நடிகையின் போன் நம்பர்

மும்பை போரிவலியை சேர்ந்த ஆயுர்வேத டாக்டர் ஒருவர், சுனில் பரஸ்மால் லோதா என்பவரின் பிளேவுட் வியாபாரத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ரூ.50 லட்சம் முதலீடு செய்தார். அடுத்த சில மாதத்தில் 38 லட்சம் லாபம் கிடைத்து... மேலும் பார்க்க

`கஸ்டமர்ஸ்க்கு மொபைல் ஆப்; சேப்டிக்கு வாடகை வீடு' - பாலியல் தொழில் செய்த 4 பெண்கள் கைது

தஞ்சாவூரில் தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்திற்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில் நடப்பதாக போலீஸாருக்கு தகவல் சென்று கொண்டே இருந்தது. இதில் சில பெண்கள் தொடர்ந்து ... மேலும் பார்க்க