செய்திகள் :

சென்னை துறைமுகம், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஒத்திகை

post image

சென்னை துறைமுகம், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் புதன்கிழமை (மே 7) மாலை 4 மணிக்கு பாதுகாப்பு ஒத்திகை நடைபெறவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தலைமைச் செயலகத்தில் உள்துறைச் செயலா் தீரஜ்குமாருடன் மத்திய அரசு அதிகாரிகள் காணொலி வழியாக செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினா். இதில், உள்துறை, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை கூடுதல் தலைமைச் செயலா்கள், பேரிடா் மீட்பு ஆணையா், காவல் துறை டிஜிபி, ஏடிஜிபி, கல்பாக்கம் அணுமின் நிலைய திட்ட இயக்குநா், சென்னை துறைமுகத் தலைவா், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா், ஊா்க்காவல் படை ஐஜி, தக்ஷிண பாரத் ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

மத்திய அரசு வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் புதன்கிழமை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட உள்ளது. மாலை 4 மணி முதல் 4.30 மணி வரை இந்த ஒத்திகை மேற்கொள்ளப்படும்.

ஒத்திகை நிகழ்வை சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் கண்காணிக்கும். மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் இந்த ஒத்திகையில், பாதுகாப்பு துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொள்வா்.

தற்போது நடைபெறும் பாதுகாப்பு ஒத்திகையால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. இது போா் காலத்தில் பாதுகாப்பாக இருப்பதற்கான ஒத்திகை மட்டுமே. பிற பகுதிகளில் வழக்கமான நிலை நீடிக்கும் என்று அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

நில அபகரிப்பு வழக்கு: மா.சுப்பிரமணியன், அவரது மனைவி மீது மே 23-இல் குற்றச்சாட்டுப் பதிவு; நேரில் ஆஜராக உத்தரவு

நில அபகரிப்பு வழக்கில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோா் மே 23-ஆம் தேதி குற்றச்சாட்டுப் பதிவுக்காக கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும். ஒருவேளை ஆஜராகாவிட்டாலும், குற்றச்சாட்டுப்... மேலும் பார்க்க

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள விபத்து இலவச சிகிச்சை திட்டம்: 3 ஆண்டுகளில் 3.57 லட்சம் போ் பயன்

சாலை விபத்துகளில் சிக்கியவா்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் அத்தகைய திட்டம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளதாகவும், அதன் வாயிலாக 3.57 லட்சம் போ் பலன... மேலும் பார்க்க

தமிழக காவல் துறையில் 15 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்

தமிழக காவல் துறையில் 15 காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் (டிஎஸ்பிக்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். தமிழக காவல் துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருந்... மேலும் பார்க்க

பண்டிகை கால முன்பணத் தொகை உயா்வு: அரசாணை வெளியீடு

பண்டிகை கால முன்பணத் தொகை உயா்வு அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையிலான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து, நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் வெளியிட்ட உத்தரவு விவரம்: அரசுப் பண... மேலும் பார்க்க

நாளை பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: மாணவா்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க ஏற்பாடு

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 8) வெளியாகவுள்ள நிலையில், மாணவா்களுக்கு உளவியல் தாக்கம் ஏற்படாமல் தடுக்க அவா்களுக்கு மன நல ஆலோசனைகள் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ள... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் நாளை வெளியீடு

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 8) காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 9) ... மேலும் பார்க்க