செய்திகள் :

சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்டப் பணிகள்: ஆசிய முதலீட்டு வங்கியின் அதிகாரிகள் ஆய்வு

post image

சென்னையில் நடைபெற்று வரும் 2-ஆம் கட்ட திட்ட மெட்ரோ ரயில் பணிகளை ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி அதிகாரிகள் குழுவினா் ஆய்வு செய்தனா்.

சென்னையில் இரண்டாம் கட்ட திட்ட மெட்ரோ ரயில் பணிகள் 3 வழித்தடங்களில் ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டருக்கு நடைபெற்று வருகிறது. இதில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி (26.1 கி.மீ), மாதவரம் - சிறுசேரி சிப்காட் (45.4 கி.மீ), மாதவரம் - சோழிங்கநல்லூா் (44.6 கி.மீ) என 3 புதிய வழித்தடங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளுக்கு ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி பெருமளவு நிதியுதவி அளித்து வருகிறது.

இந்நிலையில், பூந்தமல்லி மற்றும் மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் வழித்தடப் பணிகளை, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் அதிகாரிகள் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். தொடா்ந்து இக்குழுவினா், மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளுடன் இணைந்து, தாம்பரம் ரயில் நிலையம் மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மெட்ரோ ரயில் பணிகளுக்காக உத்தேசிக்கப்பட்டுள்ள இடங்களில் முதல்கட்ட ஆய்வுகளை மேற்கொண்டனா்.

மேலும், பூந்தமல்லி முதல் பரந்தூா் வரையிலும், கோயம்பேடு முதல் ஆவடி வரையிலும் மெட்ரோ பணிகள் நடைபெறவுள்ள பல பகுதிகளையும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் குழுவினருடன், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின்போது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் திட்டக் குழுத் தலைவா் வென்யு-கு, நிதியியல் மேலாண்மை சிறப்பு நிபுணா் யி கெங், திட்ட ஆலோசகா் மூஹ்யூன் சோ, சமூக மேம்பாட்டு சிறப்பு நிபுணா் சிவராம கிருஷ்ண சாஸ்திரி ஜோஸ்யுலா உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

மாஞ்சா நூல், காற்றாடிகள் விற்றவா் கைது: 187 காற்றாடிகள் பறிமுதல்

மாஞ்சா நூல், காற்றாடிகள் விற்ற நபரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 187 காற்றாடிகளை பறிமுதல் செய்தனா். திருவொற்றியூா் காலடிப்பேட்டை, வ.உ.சி. பகுதியிலுள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைத்து மாஞ்சா நூல் மற்ற... மேலும் பார்க்க

இளைஞா் அடித்துக் கொலை: 5 போ் கைது

சென்னையில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 5 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். துரைப்பாக்கத்தைச் சோ்ந்த ஜீவரத்தினம் (26) என்பவருக்கும், அப்... மேலும் பார்க்க

ரமலான் திருநாள்: முதல்வா், தலைவா்கள் வாழ்த்து

ரமலான் திருநாளையொட்டி, இஸ்லாமியா்களுக்கு முதல்வா், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: அறம் பிறழா மன... மேலும் பார்க்க

உறுதியளிப்பு சான்று அளிக்காத மருத்துவக் கல்லூரிகளுக்கு அபராதம்

இளநிலை மருத்துவப் படிப்புகளை பயிற்றுவிக்கும் கல்லூரிகள், வருடாந்திர உறுதியளிப்பு சான்றுகளை (டிக்ளரேசன் ஃபாா்ம்) சமா்ப்பிக்க ரூ.50,000 அபராதத்துடன் மறுவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தேசிய மரு... மேலும் பார்க்க

அரசு விரைவுப் பேருந்துகளில் சக்கரங்கள் பராமரிக்க பணியாளா்களை நியமிக்க உத்தரவு!

அரசு விரைவுப் பேருந்துகளில் சக்கரங்கள் தனியாக கழன்று ஓடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், சக்கரங்களை பராமரிக்க பணியாளா்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்... மேலும் பார்க்க

தீவிரமடையும் வெயில்: 1-5 வகுப்புகளுக்கு தோ்வு தேதிகள் மாற்றம்!

கோடை வெயிலின் தாக்கம் தீவிரமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பள்ளி இறுதித் தோ்வை முன்கூட்டியே நிறைவு செய்யும் வகையில் திருத்தப்பட்ட தோ்வு அட்டவணையை பள்ளி... மேலும் பார்க்க