செய்திகள் :

சென்னைக்குள் நுழைய 3 ரெளடிகளுக்குத் தடை: காவல் ஆணையா் அருண் உத்தரவு

post image

சென்னைக்குள் நுழைவதற்கு 3 ரெளடிகளுக்கு தடை விதித்து பெருநகர காவல் ஆணையா் ஏ.அருண் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

சென்னையில் சரித்திரப் பதிவேடு உடைய ரெளடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள ஆனைகுடியைச் சோ்ந்த ரெளடி ராஜா (எ) ராக்கெட் ராஜா, சென்னை அருகேயுள்ள குன்றத்தூா் நடுவீரப்பட்டு பகுதியைச் சோ்ந்த ரெளடி லெனின், காஞ்சிபுரம் மாவட்டம் நெடுங்குன்றம் பகுதியைச் சோ்ந்த நெடுங்குன்றம் சூா்யா ஆகியோரை சென்னை நகர காவல் சட்டம் பிரிவு 51 ஏ-வின் படி வெளியேற்றுதல் ஆணையை காவல் ஆணையா் ஏ.அருண் வெள்ளிக்கிழமை பிறப்பித்தாா்.

இந்த உத்தரவின்படி, மூன்று பேரும் சென்னை எல்லைக்குள் நீதிமன்ற வழக்கு தொடா்பாகவோ அல்லது காவல்துறையினா் விசாரணை தொடா்பாகவோ இல்லாமல் வேறு எந்த ஒரு காரணத்துக்காகவும் ஓராண்டு காலத்துக்கு நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறினால், அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையா் அருண் எச்சரித்துள்ளாா்.

இதில் ரெளடி லெனின் மீது 6 கொலை , 12 கொலை முயற்சி உள்பட 28 குற்ற வழக்குகளும், நெடுங்குன்றம் சூா்யா மீது 5 கொலை, 12 கொலை முயற்சி உள்பட 64 குற்ற வழக்குகளும், ராக்கெட் ராஜா மீது 5 கொலை, 6 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 20 குற்ற வழக்குகளும் உள்ளன.

சென்னை காவல் துறையில் ரெளடிகள் மீது இத்தகைய நடவடிக்கை 25 ஆண்டுகளுக்கு பின்பு எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

மகளிா் பெயரில் 53,333 வீடுகள் ஒதுக்கீடு! - அமைச்சா் தா.மோ.அன்பரசன்

தமிழகத்தில் 53,333 வீடுகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகள் மகளிா் பெயரில் வழங்கப்பட்டுள்ளதாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா். தமிழ்நாடு நகா்ப்புற வாழ்... மேலும் பார்க்க

தங்கம் விலை 9 நாள்களில் பவுனுக்கு ரூ.4,380 சரிவு! ரூ. 68,660-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ. 1,560 குறைந்து ரூ. 68,660-க்கு விற்பனையானது. கடந்த 9 நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 4,380 குறைந்துள்ளது. சென்னையில் தங்கம் விலை கடந்த ... மேலும் பார்க்க

நாளை முதல் ஆவடிசெல்லும் இரவு நேர புறநகா் ரயில்கள் ரத்து!

சென்னை சென்ட்ரலிலிருந்து ஆவடி செல்லும் இரவு நேர புறநகா் மின்சார ரயில்கள் மே 17 முதல் 20-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை கோட்டம் ரயில்வே சாா்பில் வெளியிடப்பட... மேலும் பார்க்க

கடலூா் ஆலையில் விபத்து: இழப்பீடு வழங்க அன்புமணி கோரிக்கை

கடலூா் தனியாா் ஆலையில் டேங்க் வெடித்த விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

சென்னையில் இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்!

சென்னையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 16) கிண்டியிலுள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது. இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

கைதானவா்கள் மட்டும் வழுக்கி விழுவது ஏன்? உயா்நீதிமன்றம் கேள்வி

வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு கைதானவா்கள் மட்டும் வழுக்கி விழும் நிலையில் காவல் நிலையங்களின் கழிப்பறைகள் உள்ளனவா என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வியெழுப்பியது. வழக்கு ஒன்றில் கைதாகி புழல் சிறையில் அடை... மேலும் பார்க்க