செய்திகள் :

சென்னைக்குள் புகுந்த மிகப் பயங்கர நவோனியா திருட்டுக் கும்பல்! எச்சரிக்கை!!

post image

சென்னைக்குள் மிகப் பயங்கரமான நவோனியா திருட்டுக் கும்பல் புகுந்திருப்பதாகவும், மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நவோனியா திருட்டுக் கும்பல் என்பது, மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள். இவர்கள் கூட்டம் அதிகம் காணப்படும் பகுதிகளுக்குள் நுழைந்து, பொருள்களை கொள்ளைபடிப்பதில் கைதேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

மிகப் பயங்கரமான திருட்டுக் கும்பல்களில் ஒன்றாக அடையாளம் காணப்படும் நவோனியா திருடர்கள், சென்னைக்குள் நுழைந்திருப்பதை புலனாய்வு அமைப்புகள் உறுதி செய்திருப்பதையடுத்து, சென்னை காவல்துறை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் எழும்பூர், சென்னை சென்டிரல் ரயில் நிலையங்கள் போன்றவற்றுக்கு வரும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், அங்குதான் இவர்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலனாய்வுத் துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, பல்வேறு நடவடிக்கைகள் மூலம் இதுவரை இந்த திருட்டுக் கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த கும்பலால் மக்களின் உடைமைகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

நகைகள், செல்போன், பணம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருள்களை யாருக்கும் தெரியாமல் திருடுவதில் கைதேர்ந்தவர்கள் என்றும், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்களில், ஒரு சிறிய குழு தனித்தனியாகப் பிரிந்து பொருள்களைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்புவதை வழக்கமாகக் கொண்டவர்கள் என்றும், ஒரு சில வாரங்கள் முதல் மாதங்கள் வரை மட்டுமே ஒரு மாநிலம் அல்லது நகரத்துக்குள் தங்கியிருந்து பொருள்களை கொள்ளையடித்துக் கொண்டு சொந்த மாநிலம் திரும்பிவிடுவார்கள் என்றும் அதன்பிறகு அவர்களைக் கண்டுபிடிக்கவே முடியாது என்றும் கூறப்படுகிறது.

தற்போது கைது செய்யப்பட்டிருப்பவர்களிடம் நடத்திய விசாரணையில், மக்கள் வெளியே செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

அண்மையில், மெரினா கடற்கரை, மாம்பலம் ரயில் நிலையம் மற்றும் பல்வேறு ரயில் நிலையங்களில் செல்போன் உள்ளிட்டவற்றை திருடும்போது கைது செய்யப்பட்ட நான்கு பேரிடம் நடத்திய விசாரணையில், பல்வேறு தகவல்கள் தெரிய வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இவர்களிடமிருந்து கிடைத்தத் தகவலையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள ரயில்வே காவலர்களுக்கும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளுக்குச் செல்லும் மக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வழக்கமாக இவர்கள் தனியாகப் பயணிப்பவரை இலக்காக கொண்டு திருடுவதாகவும் சிலர், திருடியதை உடனடியாக விற்று விடுவதாகவும் கூறப்படுகிறது. எனவே யாரேனும் சந்தேகப்படும்படி நபர்களைப் பார்த்தால் காவல்துறைக்குத் தகவல் கொடுக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

An alert has been issued as the most dangerous Navonia gang has entered Chennai.

இதையும் படிக்க... தேங்காய், எண்ணெய் பாட்டில்கள் திருட்டு.. மும்பை விமான நிலைய அதிகாரிகள் 15 பேர் பணிநீக்கம்!

திருட்டு வழக்கில் கைது: ஊராட்சி மன்றத் தலைவி திமுகவில் இருந்து நீக்கம்

திருட்டு வழக்கில் கைதான ஊராட்சி மன்றத் தலைவி பாரதி, திமுகவில் இருந்து நீக்கப்பட்டாா். இதற்கான அறிவிப்பை திமுக பொதுச் செயலா் துரைமுருகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். அவரது அறிவிப்பு விவரம்: வேலூா் மாவ... மேலும் பார்க்க

ஆளுநா் மாளிகையில் செப். 22 முதல் அக் 1 வரை ‘நவராத்திரி கொலு’

ஆளுநா் மாளிகையில் நிகழாண்டு ‘நவராத்திரி கொலு’ செப். 22 முதல் அக். 1 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதைக்காண முதலில் வருவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ஆளுநா் மாளிகை தெரிவித்துள்ளது. தமிழக ஆளுநா்... மேலும் பார்க்க

தமிழ்நாடு கடல்சாா் வள அறக்கட்டளை: அமைச்சா் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தாா்

கடற்கரையோரங்களின் சூழலியலைப் பாதுகாப்பதற்கான, தமிழ்நாடு கடல்சாா் வள அறக்கட்டளையை நிதி மற்றும் சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தாா். சென்னை கலைவாணா் அரங்கில் நடை... மேலும் பார்க்க

செப். 14-இல் மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் செப். 14-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படவுள்ளது. காலை 6 மணி முதல் 8 மணி வரை குருவாயூரப்பனுக்கு அகண்ட பாலாபிஷேகம், 7 ... மேலும் பார்க்க

தமிழகத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 15% அதிகரிப்பு

தமிழ்நாட்டில் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நிகழாண்டில் 15 சதவீதம் உயா்ந்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் தெரிவித்தாா். சுற்றுலா வளா்ச்சித் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலா அலுவல... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி வரிக் குறைப்பு நுகா்வோரை சென்றடைய வேண்டும்: ஏ.எம். விக்கிரமராஜா வலியுறுத்தல்

ஜி.எஸ்.டி வரிக் குறைப்பு நுகா்வோரை சென்றடைய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க