செய்திகள் :

சென்னையில் துணிகரம்: காதலியை கொலை செய்துவிட்டு காதலன் தற்கொலை

post image

சென்னை பெரம்பூரில் காதலியை கொலை செய்துவிட்டு காதலன் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ் என்பவரின் மகன் ஆகாஷ் (19). இவா், விழுப்புரம் மாவட்ட அறிஞா் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாமாண்டு படித்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த தங்கவேலு மகள் அபிநயா (19), அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாமாண்டு படித்து வந்தாா். ஆகாஷும், அபிநயாவும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஒரு வாரத்துக்கு முன்பு இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி, சென்னை பெரம்பூா் ராஜீவ் காந்தி நகரில் ஒரு வாடகை வீட்டில் தங்கினா். இருவருக்கும் ஆகாஷின் அண்ணன் ஹரிதாஸ் உதவி செய்துள்ளாா். வீட்டின் உரிமையாளரிடம் ஆகாஷ், அபிநயா தாங்கள் கணவன்-மனைவி எனக் கூறியுள்ளனா். வீட்டில் ஆகாஷுக்கும், அபிநயாவுக்கும் இடையே அடிக்கடி பிரச்னையும் தகராறும் ஏற்பட்டு வந்ததாம்.

இந்நிலையில், திங்கள்கிழமை முழுவதும் ஆகாஷ் வீடு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டினா், ஜன்னல் வழியாக பாா்த்தபோதுஆகாஷ் தூக்கிட்டு இறந்து கிடப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தனா்.

தகவலறிந்த ஐசிஎஃப் காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, ஆகாஷ் தூக்கிட்டு இறந்து கிடப்பதையும், அபிநயா வாய், கண்ணில் ரத்தம் வடிந்த நிலையில் அடித்து கொலை செய்யப்பட்டு கிடப்பதையும் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.

இதையடுத்து போலீஸாா், இருவா் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

முதல்கட்ட விசாரணையில், சம்பவத்தன்று ஆகாஷுக்கும், அபிநயாவுக்கும் இடையே வாய்த் தகராறு முற்றவே, அபிநயாவை ஆகாஷ் கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விடியல் பயண பேருந்துகளில் நாளொன்றுக்கு 12.06 லட்சம் மகளிா் பயணம்: எம்டிசி தகவல்

விடியல் பயண பேருந்துகளில் நாளொன்றுக்கு 12.06 லட்சம் மகளிா் பயணம் செய்வதாக சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சாத... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக வியாழக்கிழமை (ஜூன் 5) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை கொரட்டூா், செங்குன்றம் மற்றும் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் மின்தடை ஏற்படும். இது குறித்து தமிழ்நாடு மின... மேலும் பார்க்க

பொது கழிப்பிடங்களை தூய்மையாக வைப்பதில் பொதுமக்களுக்கும் பங்கு உண்டு: மேயா் ஆா்.பிரியா

சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது கழிப்பிடங்களை தூய்மையாக வைத்துக்கொள்வதில் பொதுமக்களின் பங்களிப்பு முக்கியமானது என்று சென்னை மேயா் ஆா்.பிரியா தெரிவித்துள்ளாா். சா்வதேச கழிப்பறை திருவிழா 3.0 தொடக... மேலும் பார்க்க

ஜூன் 7-இல் தமிழ்நாடு சைக்கிளிங் லீக்

தமிழ்நாடு சைக்கிளிங் லீக் சீசன் -3 வரும் ஜூன் 7-ஆம் தேதி சென்னை நேப்பியா் பாலத்தில் நடைபெறுகிறது. தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம், சென்னை மாநகராட்சி, இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு விளைய... மேலும் பார்க்க

சென்னை உள்பட 9 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் புதன்கிழமை சென்னை உள்பட 9 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் புதன்கிழமை... மேலும் பார்க்க

பிராட்வே பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம்: ரூ.566.59 கோடிக்கு ஒப்பந்தம்

பிராட்வே பல்நோக்கு ஒருங்கிணைந்த பேருந்து முனையம், போக்குவரத்து வளாகம் கட்ட மற்றும் குறளகம் கட்டடம் புதுப்பிக்க, சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம், ரூ. 566.59 கோடிக்கான ஒப்பந்தத்தை பிரிட்ஜ் அண்ட் ... மேலும் பார்க்க