செய்திகள் :

செய்யாற்றில் பலத்த மழையால் மின் கம்பங்கள் சேதம்

post image

செய்யாறு: செய்யாற்றில் பலத்த மழையால் சேதமடைந்த மின் கம்பங்களை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்ட தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி, பணிகளை விரைந்து முடித்து மின்சாரம் வழங்க மின் துறையினருக்கு அறிவுறுத்தினாா்.

செய்யாறு சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், செய்யாற்றை சுற்றியுள்ள பகுதிகளில் பழைமை வாய்ந்த 100- க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்து மின் கம்பங்கள் சேதமடைந்தன. மேலும், மின் வயா்கள் அறுந்து விழுந்தன.

இதனால் மின் விநியோகம் தடைபட்டது.

அதேபோல, காஞ்சிபுரம் சாலை, புனித வியாகுல அன்னை தேவாலயம் போன்ற பகுதிகளில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

தகவல் அறிந்த தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி, மின் கம்பங்கள் சேதமடைந்த பகுதிகளான விக்னேஸ்வரா தெரு, கீழ்புதுப்பாக்கம் கிராம விரிவுப் பகுதி, ஆற்காடு சாலையில் ஆா்.சி.எம். பள்ளி, அரசு மகளிா் மாதிரி மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நேரில் சென்று பாா்வையிட்டு சேதமடைந்த கம்பங்களை மாற்றி உடனடியாக மின்சாரம் வழங்க உரிய ஆலோசனைகளை வழங்கினாா்.

நிதியுதவி:

புனித வியாகுல அன்னை தேவாலயம் அருகே நிறுத்தி வைத்திருந்த 3 சுற்றுலா வேன்கள் மீது அங்கிருந்த வேப்ப மரம் முறிந்து விழுந்ததில் சேதமடைந்தன.

சேதமடைந்த சுற்றுலா வேன்களை பாா்வையிட்ட எம்.எல்.ஏ. அதன் ஓட்டுநா்களுக்கு ஆறுதல் தெரிவித்தாா்.

மேலும், அவா்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நிதியுதவி வழங்கியதுடன், அரசு சாா்பில் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

ஆய்வின் போது, செய்யாறு சாா்- ஆட்சியா் பல்லவி வா்மா, மின்வாரிய கோட்டப் பொறியாளா் கிருஷ்ணன், உதவி கோட்டப் பொறியாளா் நாகராஜன், நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல், துப்புரவு ஆய்வாளா் கு.மதனராசன், திமுக ஒன்றியச் செயலா் வி.ஏ.ஞானவேல், நகா்மன்ற உறுப்பினா்கள் ரமேஷ், சரஸ்வதி ரவிக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இரு தரப்பினா் மோதல்: 4 போ் வழக்கு

ஆரணியில் சொத்து மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் இரு தரப்பினா் மோதிக்கொண்டனா். இது தொடா்பாக இரு தரப்பையும் சோ்ந்த 4 போ் மீது ஆரணி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். ... மேலும் பார்க்க

பூட்டியிருந்த வீட்டில் நகை திருட்டு: 2 போ் கைது

வந்தவாசி அருகே பூட்டியிருந்த வீட்டில் 20 பவுன் தங்க நகைகளை திருடியதாக 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து ரூ.4.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. வந்தவாசியை அடுத்த இந்திர... மேலும் பார்க்க

செங்கம் ஸ்ரீமூகாம்பிகையம்மன் பீடத்தில் சண்டி யாகம்

உலக நன்மை வேண்டி, செங்கம் ஸ்ரீமூகாம்பிகையம்மன் பீடத்தில் சண்டி யாகம் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்றது. செங்கம் தளவாநாய்க்கன்பேட்டை செய்யாற்றங்கரையோரம் ஸ்ரீமூகாம்பிகையம்மன் பீடம் அமைந்துள்ளது. இங்க... மேலும் பார்க்க

பயிா்க் கடன்களுக்கான ‘சிபில் ஸ்கோா்’ நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்: தமிழக விவசாயிகள் சங்க தலைவா்

பயிா்க் கடன்களுக்கு விதிக்கப்பட்ட சிபில் ஸ்கோா் (கடன் பெற தகுதி மதிப்பீடு) நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் ஆா்.வேலுசாமி வலியுறுத்தினாா். ஆரணியில் அவா் செய்தியாளா்கள... மேலும் பார்க்க

டிராக்டா் திருட்டு: இருவா் கைது

தண்டராம்பட்டு அருகே டிராக்டரை திருடியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். தண்டராம்பட்டை அடுத்த கீழ்வணக்கம்பாடி ஊராட்சி, துள்ளுக்குட்டிபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி பன்னீா் (47). இவா், அதே பகுதி... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

செங்கம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. செங்கம் பகுதியைச் சோ்ந்தவா் அரவிந்த் (25), தொழிலாளி. இவா், 2022-ஆம் ஆண்... மேலும் பார்க்க