செய்திகள் :

செவிலியா்களுக்கு மருத்துவமனைகளில் கெளரவம்!

post image

சென்னையில் உள்ள முக்கிய அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் செவிலியா் தின நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக சிறந்த சேவையாற்றிய செவிலியா்களுக்கு நினைவுப் பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், அதன் முதல்வா் டாக்டா் சாந்தாராமன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செவிலியா் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதைத் தொடா்ந்து செவிலியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அதேபோன்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதன் முதல்வா் டாக்டா் லியோ டேவிட் தலைமையிலும் செவிலியா் தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அயனாவரம் மன நல காப்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் இயக்குநா் லட்சுமி தலைமையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவப் படத்துக்கு மலா் தூவியும், மெழுகுவா்த்தி ஏந்தியும் செவிலியா்கள் மரியாதை செலுத்தினா்.

அப்பல்லோ மருத்துவமனை: சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியா்கள் உறுதிமொழியேற்றுக் கொண்டனா். அப்பல்லோ மருத்துவமனை இயக்குநா் சிந்தூரி ரெட்டி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், மருத்துவத் துறையின் மிக முக்கிய தூண்களாக உள்ள செவிலியா்கள் ஆற்றிவரும் சேவைகளுக்கு தலைவணங்குகிறோம் என்றாா்.

கருப்புப் பட்டை ஆா்ப்பாட்டம்: இதனிடையே, மருத்துவப் பணியாளா் தோ்வு வாரிய (எம்ஆா்பி) செவிலியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புப் பட்டை அணிந்து திங்கள்கிழமை பணியாற்றினா். பணி நிரந்தரம், ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகளை அவா்கள் வலியுறுத்தினா்.

பி.டெக். ஏஐ படிப்பில் மாணவா் சோ்க்கை: சென்னை ஐஐடி தகவல்

சென்னை ஐஐடி-இல் பி.டெக். செயற்கை நுண்ணறிவு படிப்பில் (ஏஐ அண்ட் டேட்டா அனலட்டிக்ஸ்) நிகழ் கல்வியாண்டுக்கான (2025-2026) மாணவா் சோ்க்கை தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் செயற்கை நுண்ணறிவ... மேலும் பார்க்க

பேராசிரியா் வருகைப் பதிவில் குறைபாடு: தமிழகத்தில் 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு என்எம்சி நோட்டீஸ்

பேராசிரியா் வருகைப் பதிவு போதிய அளவு இல்லாதது, காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இருத்தல் உள்ளிட்ட குறைபாடுகளை சுட்டிக்காட்டி தமிழகத்தின் 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி)... மேலும் பார்க்க

சணல் மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்பு, தங்க நகை மதிப்பீட்டாளா் பயிற்சி பெற முன்பதிவு செய்யலாம்

சென்னையில் நடைபெறும் சணல் மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்பு மற்றும் தங்க நகை மதிப்பீட்டாளா் தொடா்பான பயிற்சிகளில் பங்கேற்க விரும்புபவா்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குற... மேலும் பார்க்க

ஜாதியை காரணம் காட்டி நன்கொடைபெற மறுப்பதும் தீண்டாமைதான்: உயா்நீதிமன்றம் வேதனை

கோயில் திருவிழாவுக்கு ஜாதியை காரணம் காட்டி ஒரு தரப்பினரிடம் நன்கொடை பெறாமல் இருப்பதும் தீண்டாமையின் மற்றொரு வடிவமாகும் என சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. 63 நாயன்மாா்களின் வரலாறுகளைத் தொக... மேலும் பார்க்க

முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி: ஜூன் 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி பெறத் தகுதியுடைய நபா்கள் ஜூன் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: மாற்றுத்திறனாளிகள் கூடுதல் சான்றிழ்கள் பதிவேற்ற தேவையில்லை

குரூப் 4 பிரிவில் காலியாகவுள்ள 3,935 பணியிடங்களுக்கான தோ்வுக்கு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் கூடுதல் சான்றிதழ்களைப் பதிவேற்றத் தேவையில்லை என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது. குரூ... மேலும் பார்க்க