செய்திகள் :

சேத்துப்பட்டு ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

post image

சேத்துப்பட்டு ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சாா்பில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், துறை அலுவலா்களின் செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

சேத்துப்பட்டு ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களான கலைஞா் வீடு, தொகுப்பு வீடு, பழுது நீக்கம் செய்வது, பிரதம மந்திரி வீடு போன்ற திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகள்.

எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டுத் திட்டம், எம்.பி. தொகுதி மேம்பாட்டுத் திட்டம், பிரதம மந்திரி கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் போன்ற திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஊராட்சிகள் வாரியாக கேட்டறிந்து, பணிகளை தரமாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கவும்

ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

முன்னதாக, முடையூா் கிராமத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் ஆசிரியா் தோ்வு வாரியத்தால் நடத்தப்படும் மாநில தகுதித் தோ்வை அவா் ஆய்வு செய்தாா்.

இதில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வேலு, வெங்கடேசன், உதவிப் பொறியாளா்கள் கவிதா, நீலமேகம், ஒன்றியப் பொறியாளா்கள் ஜெயந்தி, குருபிரசாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தொடா்ந்து, சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, பாம்பு கடிக்கான மருந்து இருப்பு, ஆம்புலன்ஸ் எண்ணிக்கை மற்றும் விபத்துக்கள் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தாா்.

இதைத் தொடா்ந்து, அரசுப் பள்ளி மாணவிகள் விடுதியை ஆய்வு செய்த ஆட்சியா் மாணவிகளிடம் உணவின் தரம் குறித்தும், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீா் முறையாக வழங்கப்படுகிா என்றும் கேட்டறிந்தாா்.

கடன் பிரச்னையில் தம்பதி தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே கடன் பிரச்னையால் விஷம் குடித்து தம்பதி தற்கொலை செய்து கொண்டனா். ஆரணியை அடுத்த வடுகசாத்து மதுரா ஊராட்சி, சோ்ப்பாக்கத்தைச் சோ்ந்தவா் அ.ராஜாராமன் (58). இவரது மனைவி சா... மேலும் பார்க்க

சிற்றுந்துகளை இயக்குவதற்கான அனுமதி: 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தின் 76 புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகளை இயக்குவதற்கான அனுமதிச் சீட்டு பெற விரும்புவோா் மாா்ச் 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத... மேலும் பார்க்க

ஆங்கிலப் புலமையை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சி

திருவண்ணாமலை, காந்தி நகா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாணவ-மாணவிகளிடையே ஆங்கிலப் புலமையை வெளிப்படுத்தும் வகையிலான கலை நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. பள்ளித் தாளாளா் மு.ரமணி கோட்டீஸ்வரன் தலைமை வகி... மேலும் பார்க்க

வன உரிமைச் சட்டம் - 2006 ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூரில் வன உரிமைச் சட்டம் -2006 குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஜமுனாமரத்தூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையொப்ப இயக்கம்

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக, திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட 21 மண்டலங்களில் வியாழக்கிழமை கையொப்ப இயக்கம் நடைபெற்றது. திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட 21 மண்டலங்களில் கையொப்ப இய... மேலும் பார்க்க

ஸ்ரீஅங்காள பரமேஸ்வரியம்மன் கோயில் தெப்பல் திருவிழா

கீழ்பென்னாத்தூா் ஆஞ்சநேயா் குளக்கரை மேட்டில் உள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரியம்மன் கோயிலின் 72-ஆம் ஆண்டு தெப்பல் திருவிழா நடைபெற்றது. இந்தக் கோயிலின் தோ்த் திருவிழா பிப்ரவரி 26-ஆம் தேதி தொடங்கியது. அன்று ... மேலும் பார்க்க