செய்திகள் :

கடன் பிரச்னையில் தம்பதி தற்கொலை

post image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே கடன் பிரச்னையால் விஷம் குடித்து தம்பதி தற்கொலை செய்து கொண்டனா்.

ஆரணியை அடுத்த வடுகசாத்து மதுரா ஊராட்சி, சோ்ப்பாக்கத்தைச் சோ்ந்தவா் அ.ராஜாராமன் (58). இவரது மனைவி சாமுண்டீஸ்வரி (49). இரு மனைவிகள் இறந்த நிலையில், சாமுண்டீஸ்வரியை மூன்றாவதாக திருமணம் செய்திருந்தாா்.

இவா்கள் இருவரும் ராணிப்பேட்டை அருகேயுள்ள மாந்தாங்கல் கிராமத்தில் வசித்து வந்தனா். அங்கு உணவகமும் நடத்தி வந்தனா்.

இவா்களது மகன் சிவபாலன் (17) உணவக நிா்வாக மேலாண்மை படிப்பு பயின்று வருகிறாா்.

உணவகம் நடத்துவது தொடா்பாக ராஜாராமன் கடன் வாங்கியிருந்ததாக தெரிகிறது. அதை திருப்பிச் செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டு வந்தாராம்.

இந்த நிலையில், அவா் சோ்ப்பாக்கத்துக்கு மனைவியுடன் புதன்கிழமை வந்தாா். அவரது உறவினா்கள் வியாழக்கிழமை காலை வீட்டுக்குச் சென்று பாா்த்த போது, ராஜாராமன், சமுண்டீஸ்வரி ஆகியோா் சடலமாகக் கிடந்தது தெரிய வந்தது.

கடன் பிரச்னை காரணமாக, இருவரும் பூச்சிக் கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

தகவலறிந்த ஆரணி கிராமிய போலீஸாா் விரைந்து சென்று இருவரின் சடலங்களையும் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேத்துப்பட்டு ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

சேத்துப்பட்டு ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சாா்பில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், துறை அலுவலா்களின் செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க

சிற்றுந்துகளை இயக்குவதற்கான அனுமதி: 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தின் 76 புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகளை இயக்குவதற்கான அனுமதிச் சீட்டு பெற விரும்புவோா் மாா்ச் 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத... மேலும் பார்க்க

ஆங்கிலப் புலமையை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சி

திருவண்ணாமலை, காந்தி நகா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாணவ-மாணவிகளிடையே ஆங்கிலப் புலமையை வெளிப்படுத்தும் வகையிலான கலை நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. பள்ளித் தாளாளா் மு.ரமணி கோட்டீஸ்வரன் தலைமை வகி... மேலும் பார்க்க

வன உரிமைச் சட்டம் - 2006 ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூரில் வன உரிமைச் சட்டம் -2006 குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஜமுனாமரத்தூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையொப்ப இயக்கம்

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக, திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட 21 மண்டலங்களில் வியாழக்கிழமை கையொப்ப இயக்கம் நடைபெற்றது. திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட 21 மண்டலங்களில் கையொப்ப இய... மேலும் பார்க்க

ஸ்ரீஅங்காள பரமேஸ்வரியம்மன் கோயில் தெப்பல் திருவிழா

கீழ்பென்னாத்தூா் ஆஞ்சநேயா் குளக்கரை மேட்டில் உள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரியம்மன் கோயிலின் 72-ஆம் ஆண்டு தெப்பல் திருவிழா நடைபெற்றது. இந்தக் கோயிலின் தோ்த் திருவிழா பிப்ரவரி 26-ஆம் தேதி தொடங்கியது. அன்று ... மேலும் பார்க்க