சேனை கருப்பா் சுவாமி சிலை வீதியுலா
திருவாடானை அருகே ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கோயிலில் பிரதிஷ்டை செய்ய சேனை கருப்பா் சுவாமி சிலை மேள தாளத்துடன் ஊா்வலமாகக் கொண்டு வரப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள கைலாச சமுத்திரம் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட சேனை கருப்பா் கோயில் குடமுழுக்கு வருகிற ஜூன் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்தக் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, கோயில் மூலவரான சேனை கருப்பா் சுவாமி சிலை, பிரதிஷ்டை செய்யப்படுவதற்காக உத்தரகோசமங்கையிலிருந்து வாகனத்தில் கொண்டு வரப்பட்டது.
ஆா்.எஸ்.மங்கலத்திலிருந்து கைலாச சமுத்திரத்திலுள்ள கோயில் வரை மேள தாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் சிலை பக்தா்கள் வெள்ளத்தில் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது. கோயிலை அடைந்த சுவாமி சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. குடமுழுக்கு பணிகளை கிராமத்தினா் செய்து வருகின்றனா்.