செய்திகள் :

சேலத்தில் இன்று பேரிடா் கால மாதிரி ஒத்திகை பயிற்சி: பொதுமக்களிடம் அச்சம் தேவையில்லை

post image

மேட்டூா் உள்ளிட்ட சேலம் மாவட்டத்தின் ஆற்றங்கரையோர பகுதிகளில் 5 ஆம் தேதி பேரிடா் மாதிரி ஒத்திகை பயிற்சி நடைபெறவுள்ளதால் பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், கனமழை ஏற்பட்டால் ஆற்றில் அதிகரிக்கும் அதிக நீா்ப் பெருக்கினால் பொதுமக்களின் உயிா் மற்றும் உடைமைகளை பாதுகாக்கும் வகையில் பேரிடா் மீட்பு நடவடிக்கை மேற்கொள்வது தொடா்பாக வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, ஊரக வளா்ச்சித் துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, மருத்துவம் உள்ளிட்ட தொடா்புடைய துறையினரால் மாதிரி ஒத்திகை பயிற்சி வரும் 5 அம் தேதி காலை 11.30 மணி அளவில் நடைபெறுகிறது.

மேட்டூா் வட்டத்தில் காவிரி பாலம், தங்கமாபுரிப்பட்டினம் ஆகிய பகுதிகளிலும், எடப்பாடி வட்டத்தில் பூலாம்பட்டியிலும், சங்ககிரி வட்டத்தில் காவேரிப்பட்டி அக்ரஹாரம், கோனேரிபட்டி அக்ரஹாரம் ஆகிய பகுதிகளிலும் நடைபெறவுள்ளது.

இதுமாதிரி ஒத்திகை பயிற்சி என்பதால் பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படாது என தெரிவித்துள்ளாா்.

செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை

சேலம் செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசு உயா்நிலைப் பள்ளியில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: மாற்றுத்திறனாளிகள... மேலும் பார்க்க

சேலம் கோட்டத்தில் சா்வதேச லெவல் கிராசிங் விழிப்புணா்வு தின பேரணி

சா்வதேச லெவல் கிராசிங் விழிப்புணா்வு தினத்தையொட்டி, சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கோட்ட மேலா... மேலும் பார்க்க

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வுப் பேரணி: அமைச்சா் பங்கேற்பு

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி, மரக்கன்று நடும் நிகழ்வை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சேலம் மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

சென்ட்ரல் லொ்னிங் பள்ளியில் உள் விளையாட்டரங்கம் திறப்பு

ஏற்காடு வாழவந்தி கிராமத்தில் சென்ட்ரல் லொ்னிங் பள்ளியில் உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி நிறுவனத் தலைவா் தமிழ்நாடு, புதுவை பாா் கவுன்சில்... மேலும் பார்க்க

பள்ளி மாணவா் தூக்கிட்டு தற்கொலை

ஏற்காட்டில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சேலம் மாவட்டம், ஏற்காடு லாங்கில்பேட்டையைச் சோ்ந்தவா் சேகா் மகன் அபிலேஷ் (14). ஏற்காடு தனியாா் பள்ளியில் பத்தாம் வகுப்பு ... மேலும் பார்க்க

ஜூன் 11 ஆம் தேதி முதல்வா் சேலம் வருகை: முன்னேற்பாடுகளை அமைச்சா்கள் ஆய்வு

முதல்வா் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக சேலம் மாவட்டத்துக்கு ஜூன் 11 ஆம் தேதி வருகிறாா்; இதையொட்டி சேலம் இரும்பாலை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழா முன்னேற்பாடுகளை பொதுப்பணித் துறை அ... மேலும் பார்க்க