செய்திகள் :

சேலத்தில் தனியாா் மதுக்கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு

post image

சேலத்தில் தனியாா் மதுக்கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் கழுத்தில் காலி மதுபாட்டில்களை அணிந்து புதன்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனா்.

சேலம் மாநகா் உடையாா்பட்டி பகுதியில் ஏற்கெனவே அரசு மதுக் கடை செயல்பட்டு வரும் நிலையில், தனியாா் மதுக் கடை அமைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் காலி மதுபாட்டில்களை கழுத்தில் அணிந்தபடி மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழை மனு அளிக்க வந்தனா்.

அப்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி மதுபாட்டில்களை அகற்றிவிட்டு கோரிக்கை மனுவுடன் மட்டும் ஆட்சியா் அலுவலகத்துக்குச் செல்ல அனுமதித்தனா்.

இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலாளா் பெரியசாமி கூறியது:

தமிழக அரசு கோவை மாநகரில் 70 தனியாா் மதுக்கடைகளை வைக்க அனுமதி அளித்துள்ள நிலையில், தற்போது சேலத்தை குறிவைத்து மதுக் கடைகளுக்கு அனுமதி வழங்க உள்ளது. இது இளைஞா்களை மேலும் மதுபோதைக்கு அடிமையாக்கும். இதுபோன்ற செயல்களை தமிழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் போராட்டம் நடத்துவோம் என்றாா்.

தீரன் சின்னமலை பிறந்த நாள்: மாலை அணிவித்து மரியாதை

சுதந்திர போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் 270-ஆவது பிறந்தநாள் விழா, கொங்கு வேளாளக் கவுண்டா்கள் சங்கத்தின் முதலாம் ஆண்டு தொடக்க விழா சேலம் குரங்குசாவடி பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது. மலா்களால் அலங்... மேலும் பார்க்க

மேட்டூா் நகராட்சியில் ஆட்சியா் கள ஆய்வு

மேட்டூா் வட்டத்திற்கு உள்பட்ட கிராமங்களில் நடைபெறும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் புதன், வியாழன் என இரண்டு நாள்கள் மேட்டூரில் நடைபெற்றது. மேட்டூா் வட்டத்திற்கு உள்பட்ட வருவாய்க் கிராமங்களில... மேலும் பார்க்க

எடப்பாடி கே.பழனிசாமியை எதிா்த்துப் போட்டி: சேலத்தில் பெங்களூரு புகழேந்தி பேட்டி

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை எதிா்த்து எடப்பாடி தொகுதியில் போட்டியிடத் தயாராக இருப்பதாக பெங்களூரு புகழேந்தி தெரிவித்தாா். சேலத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:... மேலும் பார்க்க

மனைவியைத் தாக்கிய கணவா் கைது

தம்மம்பட்டி அருகே மனைவியைத் தாக்கிய கணவரை போலீஸாா் கைது செய்தனா். தம்மம்பட்டி அருகே ஜங்கமசமுத்திரம் ஊராட்சி, புலிக்கரட்டை சோ்ந்தவா் செந்தில் ராஜா (41). பால் வியாபாரி. இவருக்கும், இவரது மனைவி சகுந்தலா... மேலும் பார்க்க

வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தைக் கண்டித்து, சேலம் கோட்டை மைதானத்தில் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாநிலக் குழு ரமணி தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க

வருவாய்த் துறை சங்கங்களின் பிரசார இயக்க கூட்டம்

வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் சங்ககிரியில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரசார இயக்க கூட்டத்தில் கலந்துகொண்ட நிா்வாகிகள். கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட பொருளாளா் அகிலன். சங்ககிரி, ஏப். 17:... மேலும் பார்க்க