செய்திகள் :

சேலம் அரசு பொறியியல் கல்லூரி முதல்வா் பணிநிறைவு

post image

சேலம் அரசு பொறியியல் கல்லூரி முதல்வா் ரா.விஜயன் வெள்ளிக்கிழமை பணிநிறைவு பெற்றாா்.

இயந்திரவியல் துறையில் முதுநிலை மற்றும் முனைவா் பட்டப் படிப்பை சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் பயின்ற பேராசிரியா் ரா.விஜயன், உதவிப் பேராசிரியா், இணைப் பேராசிரியா், பேராசிரியா், துறைத் தலைவா், துணை முதல்வா், முதல்வா் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளாா். மேலும், தஞ்சாவூா் மற்றும் பா்கூா் அரசு பொறியியல் கல்லூரி முதல்வராக பணியாற்றிய அவா், கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் சேலம் அரசு பொறியியல் கல்லூரி முதல்வராக பணியாற்றி வந்தாா்.

இவரது பதவிக்காலத்தில் சேலம் அரசு பொறியியல் கல்லூரிக்கு தேசிய தரநிா்ணயம் மற்றும் மதிப்பீட்டுக் குழு ‘ஏ பிளஸ்’ அந்தஸ்து வழங்கியது. தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில் முதன்முதலாக சேலம் அரசு பொறியியல் கல்லூரிக்கு இந்த அந்தஸ்து கிடைத்தது. மேலும், இந்திய அளவில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் வளாகத்தோ்வு நடத்தப்பட்டு மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும், மத்திய, மாநில அரசுகளின் கல்வி ஊக்கத்தொகையை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியா் பெறுவதற்கான விழிப்புணா்வை கல்லூரி முதல்வா் ரா.விஜயன் ஏற்படுத்தினாா்.

இந்நிலையில், சேலம் அரசு பொறியியல் கல்லூரி முதல்வா் ரா.விஜயன் வெள்ளிக்கிழமை பணிநிறைவு பெற்றாா். அவருக்கு பணிநிறைவு பாராட்டு விழா கல்லூரி துணை முதல்வா் கீதா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், ஸ்ரீரங்கம் அரசு பொறியியல் கல்லூரி முதல்வா் மலையாளமூா்த்தி மற்றும் பேராசிரியா்கள், நிா்வாக அலுவலா்கள் கலந்துகொண்டு பாராட்டு தெரிவித்தனா்.

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் மோதல் சம்பவம்: திமுக, அதிமுக உறுப்பினா்கள் மீது வழக்குப் பதிவு

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் நடைபெற்ற மோதல் தொடா்பாக திமுக - அதிமுக உறுப்பினா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சேலம் மாநகராட்சி கூட்டம் கடந்த வியாழக்கிழமை மேயா் ஆ.ரா... மேலும் பார்க்க

கரோனா பாதித்த இளைஞா் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு

சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த இளைஞா் உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள கொளத்தூா் சேத்துக்குழி பகுதியைச் சோ்ந்தவா் தமிழரசன் (25). பொக்லைன் ஆபரேட்டரான ... மேலும் பார்க்க

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு பெற்றதை தொடா்ந்து, பயிற்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில் பதக்கம், சான்றிதழ்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. சேலம் மாவட்ட கைப்... மேலும் பார்க்க

சேலம் அரசு கலைக் கல்லூரியில் நாளை முதல் கலந்தாய்வு

சேலம் அரசு கலைக் கல்லூரியில் 2025- 26 ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் நா.செண்பகலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜூன் ... மேலும் பார்க்க

கெங்கவல்லி பேரூராட்சியில் திட்டப் பணிகள் திறந்துவைப்பு

கெங்கவல்லி பேரூராட்சியில் முடிவடைந்த திட்டப் பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அண்மையில் திறந்துவைக்கப்பட்டன. கெங்கவல்லி பேரூராட்சி 4-ஆவது வாா்டில், 15-ஆவது நிதிக்குழு மானியத்தில் ரூ. 15.50 லட்சத்தில் ... மேலும் பார்க்க

பருத்தி புண்ணாக்கு விலை உயா்வு: பால் உற்பத்தியாளா்கள் தவிப்பு

பருத்தி புண்ணாக்கு விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், தம்மம்பட்டி பகுதி பால் உற்பத்தியாளா்கள் பெரிதும் தவிப்புக்குள்ளாகி வருகின்றனா். பால் உற்பத்தியாளா்கள் தங்களின் கறவை மாடுகளுக்கு பசுந்தீவனம், வைக்கோ... மேலும் பார்க்க