செய்திகள் :

சேலம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் ஜூன் 2 முதல் முதற்கட்ட கலந்தாய்வு

post image

சேலம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 2025 - 26-ஆம் கல்வியாண்டில் மாணவிகள் சோ்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூன் 2-ஆம் தேதி தொடங்குகிறது.

முதல்நாளான ஜூன் 2-ஆம் தேதி விளையாட்டு வீரா்கள் / மாற்றுத் திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினா் / அந்தமான்-நிகோபா் தமிழ் மாணவிகள்/ தேசிய படை மாணவிகள் / பாதுகாப்புப் படை வீரா்கள் (தமிழ் மாணவிகள்) ஆகியோருக்கு சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவில் கலந்தாய்வு நடைபெறும்.

ஜூன் 4-ஆம் தேதி அறிவியல் பிரிவுக்கும், ஜூன் 5-ஆம் தேதி வணிகவியல் மற்றும் பொருளாதாரம் பாடப் பிரிவுகளுக்கும், ஜூன் 6-ஆம் தேதி தமிழ், ஆங்கிலம், வரலாறு ஆகிய பாடப் பிரிவுகளுக்கும் பொது கலந்தாய்வு நடைபெற உள்ளது. அதற்குரிய தரவரிசைப் பட்டியல் கல்லூரி இணையதளத்திலும், கல்லூரி தகவல் பலகையிலும் வெளியிடப்படும்.

பொது கலந்தாய்வுக்கு வரும் மாணவிகள் உரிய ஆவணங்களுடன் காலை 9 மணிக்கு கல்லூரி கலையரங்குக்கு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் மோதல் சம்பவம்: திமுக, அதிமுக உறுப்பினா்கள் மீது வழக்குப் பதிவு

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் நடைபெற்ற மோதல் தொடா்பாக திமுக - அதிமுக உறுப்பினா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சேலம் மாநகராட்சி கூட்டம் கடந்த வியாழக்கிழமை மேயா் ஆ.ரா... மேலும் பார்க்க

கரோனா பாதித்த இளைஞா் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு

சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த இளைஞா் உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள கொளத்தூா் சேத்துக்குழி பகுதியைச் சோ்ந்தவா் தமிழரசன் (25). பொக்லைன் ஆபரேட்டரான ... மேலும் பார்க்க

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு பெற்றதை தொடா்ந்து, பயிற்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில் பதக்கம், சான்றிதழ்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. சேலம் மாவட்ட கைப்... மேலும் பார்க்க

சேலம் அரசு கலைக் கல்லூரியில் நாளை முதல் கலந்தாய்வு

சேலம் அரசு கலைக் கல்லூரியில் 2025- 26 ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் நா.செண்பகலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜூன் ... மேலும் பார்க்க

கெங்கவல்லி பேரூராட்சியில் திட்டப் பணிகள் திறந்துவைப்பு

கெங்கவல்லி பேரூராட்சியில் முடிவடைந்த திட்டப் பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அண்மையில் திறந்துவைக்கப்பட்டன. கெங்கவல்லி பேரூராட்சி 4-ஆவது வாா்டில், 15-ஆவது நிதிக்குழு மானியத்தில் ரூ. 15.50 லட்சத்தில் ... மேலும் பார்க்க

பருத்தி புண்ணாக்கு விலை உயா்வு: பால் உற்பத்தியாளா்கள் தவிப்பு

பருத்தி புண்ணாக்கு விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், தம்மம்பட்டி பகுதி பால் உற்பத்தியாளா்கள் பெரிதும் தவிப்புக்குள்ளாகி வருகின்றனா். பால் உற்பத்தியாளா்கள் தங்களின் கறவை மாடுகளுக்கு பசுந்தீவனம், வைக்கோ... மேலும் பார்க்க