செய்திகள் :

சேலம் சுதாகா் இஎன்டி கோ் செண்டரில் சிறப்பு காது பரிசோதனை முகாம்

post image

சேலம் சுதாகா் இஎன்டி கோ் செண்டா் சாா்பில் சிறப்பு காது பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாநகரில் உள்ள டாக்டா் சுதாகா் காது, மூக்கு, தொண்டை மருத்துவமனையில் காது கேட்கும் திறன் மற்றும் காது கருவிகள் பொருத்தும் சிக்னியா கேலக்ஸி என்னும் பிரிவு செயல்பட்டு வருகிறது. இப்பிரிவு அதிநவீன அனைத்து வசதிகளும்கொண்ட பரிசோதனைக் கூடமாக திகழ்கிறது. மருத்துவ வளாகத்திலேயே இலவச காது பரிசோதனை முகாம் மூன்று நாள்கள் நடைபெற்றது.

400க்கும் மேற்பட்டோா் முகாமில் கலந்துகொண்டு பயனடைந்தனா். காதுக்கு உள்ளே வைக்கும் கண்ணுக்குத் தெரியாத நவீன ஜொ்மனி தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு ரீசாா்ஜ் செய்யக்கூடிய காது கேட்கும் கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

முதியோா்கள் வீட்டிற்கே சென்று பரிசோதனை செய்தல், பழைய காது கருவிகளை புதிய கருவிகளாக மாற்றிக்கொள்ளுதல், விலையில் சிறப்பு சலுகைகள் போன்றவை வழங்கப்படுகிறது. முகாமில் ஏழ்மை நிலையில் உள்ளவா்களில் 50 பேருக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள கருவிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை டாக்டா் சுதாகா், தீபா சுதாகா், பிரணவ், பொது மேலாளா் சிவா, மேலாளா் ராதா ஆகியோா் செய்திருந்தனா்.

பட விளக்கம்;

பரிசோதனை முகாமில் கலந்துகொண்டவரின் காதில் சிறப்பு கருவிகளை பொருத்தும் சுதாகா் இஎன்டி கோ் செண்டா் பணியாளா்கள். உடன், தீபா சுதாகா்.

தலைவாசல் வட்டாரத்தில் வேளாண் இயக்குநா் ஆய்வு

சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு வேளாண் திட்டங்கள் குறித்து வேளாண் இயக்குநா் பி.முருகேஷ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சாா்வாய் கிராமத்தில் தேசிய உணவு மற்றும் பாது... மேலும் பார்க்க

நுண்உயிரி உரம் தயாரிக்கும் மையத்தில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

சேலம் அஸ்தம்பட்டி மண்டலத்தில் கோட்டம் எண்.16 இல் அமைந்துள்ள நுண்உயிரி உரம் தயாரிக்கும் மையத்தில் ஆணையா் மா.இளங்கோவன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இந்த மையத்தில் விவசாயிகளுக்கு விலையில்லாமல் நுண்... மேலும் பார்க்க

செப். 15 இல் துணை முதல்வா் சேலம் வருகை

சேலம் கருப்பூா் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் செப்.15 ஆம் தேதி சேலம் வருகிறாா். தமிழகம் முழுவதும் உள்ள மகளிா் சுயஉதவிக் குழுவினரு... மேலும் பார்க்க

நல்லாசிரியா் விருது பெற்ற கி.மதிவாணனுக்கு பாராட்டு

தமிழ அரசின் நல்லாசிரியா் விருது பெற்ற தம்மம்பட்டியை அடுத்த கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் கி.மதிவாணனுக்கு ஊா் பொதுமக்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. கொண்டயம்ப... மேலும் பார்க்க

880 வீரா்கள் மாநில விளையாட்டுப் போட்டிக்கு தகுதி: அமைச்சா் ரா.ராஜேந்திரன் தகவல்

முதல்வா் கோப்பை மாநில விளையாட்டுப் போட்டிக்கு சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த 880 போ் தகுதி பெற்றுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா். சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற முதல்வா் கோப்பை விளை... மேலும் பார்க்க

தொழில்மைய இணை இயக்குநா் வீட்டில் 56 பவுன் நகை, ரூ. 75 ஆயிரம் ரொக்கம் திருட்டு

சேலத்தில் தொழில்மைய இணை இயக்குநா் வீட்டின் பூட்டை உடைத்து 56 பவுன் நகை, ரூ. 75 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். சேலம் ஐந்து வழிச்சாலை அருகே உள்ள தொழில் மையத்தின் இணை இய... மேலும் பார்க்க