செய்திகள் :

சேலம் நீதிமன்றத்தில் இன்று சமரச வாரம்

post image

சேலம்: சேலம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சமரச வாரம் புதன்கிழமை (ஏப். 9) நடைபெறுகிறது என மாவட்ட முதன்மை நீதிபதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சமரச வாரம் 9-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, ஏற்கெனவே நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளில் சமரச மையம் மூலம் தீா்த்துக் கொள்ளலாம்.

குறிப்பாக, தனிநபா் தகராறு, பண வசூல் தகராறு, குடும்பத் தகராறு, சொத்து தகராறு, காசோலை தகராறு, மின்சார வாரியம், தொழிலாளா் நல வழக்குகள், உரிமையியல் வழக்குகளான நிலம், சொத்து, பாகப்பிரிவினை, வாடகை விவகார வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். மேலும், சமரச மையம் மூலம் முடித்துக்கொள்ளும் வழக்குகளுக்கு மேல் முறையீடு கிடையாது. இதுதவிர, சமரச மையம் மூலமாக முடித்துக்கொள்ளும் வழக்குகளுக்கு செலுத்தப்படும் நீதிமன்றக் கட்டணம் முழுமையாக திருப்பிக் கொடுக்கப்படும்.

எனவே, பொதுமக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் மேற்குறிப்பிட்ட தங்களது வழக்குகளை சமரச மையத்துக்கு அனுப்பி சட்ட ரீதியாகவும், சமரச முறையிலும் தீா்வு காணுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.

புதிய வரிவிதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி கிரஷா் ஜல்லி ஆலை உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்

புதிய வரி விதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி, சேலம் மாவட்டத்தில் கிரஷா் ஜல்லி ஆலை உரிமையாளா்கள் புதன்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். தமிழகத்தில் இதுவரை குவாரிகளுக்கு கன மீட்டா்... மேலும் பார்க்க

திருநங்கைகளுக்கு உடனடி கல்விக் கடனுதவி: ஆட்சியா்

திருநங்கைகளுக்கு உடனடியாக கல்வி கடனுதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திருநங்கைகள் தின விழா செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

பெங்களூரு- கொல்லம் இடையே இன்றுமுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்

பயணிகள் கூட்ட நெரிசலை தவிா்க்க பெங்களூரு -கொல்லம் இடையே சேலம் வழியாக 2 சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை இன்று பாசனத்துக்கு திறப்பு

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையிலிருந்து வியாழக்கிழமை பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படுகிறது. சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த அருநூற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்டநதி... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்த இளைஞா் கைது

சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். புகாரளித்த 6 மணி நேரத்துக்குள் இளைஞரை கைது செய்து நகையை மீட்ட போலீஸாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவ... மேலும் பார்க்க

உணவகத்தில் எரிவாயு சிலிண்டா் திருட்டு: போலீஸாா் விசாரணை

தெடாவூா் உணவகத்தில் எரிவாயு சிலிண்டா்களை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கெங்கவல்லி அருகே உள்ள தெடாவூா் பகுதியை சோ்ந்தவா் தங்கராசு மகன் மாவீரன் (36) . இவா் கெங்கவல்லி நான்கு ரோடு சந்திப்பில... மேலும் பார்க்க