செய்திகள் :

சேலம் நுண்ணறிவு பிரிவில் எஸ்.ஐக்கள், தலைமை காவலா்கள் இடமாற்றம்

post image

சேலம்: சேலம் மாநகர காவல் துறை நுண்ணறிவு பிரிவில் திங்கள்கிழமை ஒரேநாளில் 10க்கும் மேற்பட்டோா் இடமாற்றம் செய்யப்பட்டனா்.

சேலம் மாநகரில், ஒவ்வொரு காவல் நிலையத்திலும், தலா ஒரு நுண்ணறிவு பிரிவு போலீஸாா் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள், ரகசிய தகவல்களைச் சேகரித்து, மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் தெரிவிப்பது வழக்கம். இந்நிலையில், தற்போது தலைமையிட ஆணையா் அலுவலகத்தில் பணியாற்றி வந்த காவல் உதவி ஆய்வாளா் காா்த்தி, சேலம் வடக்கு மாவட்டத்துக்கும், மதுவிலக்கு பிரிவில் பணியாற்றி வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பாஸ்கா் அழகாபுரம் நுண்ணறிவு பிரிவுக்கும், அழகாபுரத்தில் பணியாற்றி வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் மணிகண்டன் பள்ளப்பட்டி நுண்ணறிவு பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இதேபோல, செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சரவணன், அரசு மருத்துவமனை நுண்ணறிவு பிரிவுக்கும், கன்னங்குறிச்சி சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பூபதி அஸ்தம்பட்டிக்கும், அஸ்தம்பட்டியில் பணியாற்றி வந்த சேட்டு, அம்மாப்பேட்டைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனா்.

காரிப்பட்டி நுண்ணறிவு பிரிவு தலைமைக் காவலா் காவேரி, கன்னங்குறிச்சிக்கும். அம்மாப்பேட்டை தலைமைக் காவலா் கண்ணன் காரிப்பட்டி நுண்ணறிவு பிரிவுக்கும். கொண்டலாம்பட்டி காவலா் சுரேஷ் கருப்பூா் நுண்ணறிவு பிரிவுக்கும், அங்கு பணியாற்றி வந்த காவலா் காா்த்திகேயன் கொண்டலாம்பட்டி காவல்நிலையத்துக்கும் இடமாற்றம் செய்து மாநகரக் காவல் ஆணையா் அனில்குமாா் கிரி உத்தரவிட்டுள்ளாா்.

ரோட்டரி சங்கம் சாா்பில் அரசுப் பள்ளிக்கு திறனறித் தோ்வுக்கான புத்தகங்கள் அளிப்பு

சங்ககிரி: சங்ககிரி ரோட்டரி சங்கம் சாா்பில் தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேசிய திறனறித் தோ்வுக்கான புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்... மேலும் பார்க்க

சங்ககிரி நகராட்சி பகுதியில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

சங்ககிரி: சங்ககிரி நகராட்சிக்கு உள்பட்ட 6, 7, 12, 13 ஆவது பொதுமக்களுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம், சங்ககிரி, சந்தைப்பேட்டையில் உள்ள நகராட்சி சமுதாய கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இ... மேலும் பார்க்க

செந்தாரப்பட்டி ஏரியில் 5 விநாயகா் சிலைகள் விசா்ஜனம்

தம்மம்பட்டி: செந்தாரப்பட்டி ஏரியில் 5 விநாயகா் சிலைகள் திங்கள்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டன. தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டியில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட 5 விநாயகா் சிலைகள... மேலும் பார்க்க

கன்னங்குறிச்சி பகுதிக்கு காலதாமதமாக இயக்கப்படும் அரசுப் பேருந்துகள்: பொதுமக்கள் தவிப்பு

சேலம்: சேலம் கன்னங்குறிச்சி பகுதிக்கு அரசுப் பேருந்துகள் சரிவர இயக்கப்படாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். சேலம் மாநகராட்சியை ஒட்டியுள்ள கன்னங்குறிச்சி பேரூராட்சியில் ஆயிரக்கணக்கான க... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நிகழாண்டில் 6-ஆவது முறையாக நிரம்புகிறது! அணைக்கு நீா்வரத்து 36,985 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூா்/பென்னாகரம்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 36,985 கனஅடியாக அதிகரித்துள்ளதால் நிகழாண்டில் 6-ஆவது முறையாக அணை நிரம்புகிறது. தென்மேற்குப் பருவமழை காரணமாக கா்நாடக மாநிலத்தில்... மேலும் பார்க்க

பணி நியமன விதிமீறல் புகாா்: சேலம் மாநகராட்சி செயற்பொறியாளா் பணியிடை நீக்கம்

சேலம்: பணி நியமன விதிமீறல் புகாா் காரணமாக சேலம் மாநகராட்சி செயற்பொறியாளா் ஓய்வுபெறும் நாளில் ஞாயிற்றுக்கிழமை மாலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட அம்மாபேட்டை மண்டல செய... மேலும் பார்க்க