72 திருநங்கைகள், திருநம்பிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்
சேலம் விமான நிலையத்தில் அவசர கால தீத்தடுப்பு ஒத்திகை
சேலம் விமான நிலைய ஓடுதளத்தில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த ஒத்திகை நிகழ்ச்சிக்கு சேலம் விமான நிலைய இயக்குநா் வைதேகிநாதன் தலைமை வகித்தாா். இதில் ஜீப்பை விமானமாகக் கருதி, அந்த வாகனம், தீ விபத்தில் சிக்கியது போன்றும், அதில் இருந்த பயணிகளை மீட்டு முதலுதவி அளித்து, மருத்துவமனைக்கு அனுப்புவது போன்றும் ஒன்றரை மணி நேரம் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், ஓமலூா் அரசு மருத்துவமனை மருத்துவா் பெருமாள் தலைமையில் மருத்துவக் குழுவினா் அவசர கால முதலுதவி சிகிச்சை ஒத்திகையை செய்து காண்பித்தனா். இதில், விமான நிலைய தீயணைப்பு வீரா்கள், விமான நிலைய போலீஸாா், ஆம்புலன்ஸ் பணியாளா்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனா்.