செய்திகள் :

சைபா் மோசடி வழக்கை விசாரிக்க லஞ்சம்: 2 காவல் அதிகாரிகள் கைது -லோக் ஆயுக்த நடவடிக்கை

post image

சைபா் மோசடி வழக்கை விசாரிக்க லஞ்சம் கேட்ட இரு காவல் அதிகாரிகளை லோக் ஆயுக்த போலீஸாா் கைது செய்தனா்.

சைபா் மோசடி வழக்கை விசாரித்து, மோசடிக்காரா்களை கைது செய்வதற்கு ரூ. 4 லட்சம் கேட்டதாக மென்பொருள் பொறியாளா் அளித்த புகாரின் அடிப்படையில், பெங்களூரு வடகிழக்கு மண்டலத்தில் சைபா் பொருளாதார மற்றும் போதைப்பொருள் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் உதவி காவல் ஆணையா் எஸ்.ஆா்.தன்வீா், உதவி துணை காவல் ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோரை லோக் ஆயுக்த போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

இதுதொடா்பாக செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, ரூ. 2 லட்சத்தை லஞ்சமாக பெற்றபோது உதவி துணை காவல் ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தியை லோக் ஆயுக்த போலீஸாா் கைது செய்தனா். அவா் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் உதவி காவல் ஆணையா் தன்வீா் கைது செய்யப்பட்டாா். இதுதவிர, மேலும் 3 லஞ்ச வழக்குகளில் 4 அரசு அதிகாரிகளை லோக் ஆயுக்த போலீஸாா் கைது செய்தனா்.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பொருள் கொள்முதல் பில் தொகையை

அளிப்பதற்காக லஞ்சம் பெற்ற ராமநகரம் மாவட்டம், சௌமேத்யப்பனஹள்ளி கிராம பஞ்சாயத்து வளா்ச்சி அதிகாரி ஜி.முனிராஜு, விவசாயிகளுக்கு கடனுதவி வழங்குவதற்காக ரூ. 15,000 லஞ்சமாக பெற்ற, சித்ரதுா்கா மாவட்டம், ஹொசதுா்காவில் உள்ள மாவட்ட கடன் கூட்டுறவு வங்கிக் கிளை கண்காணிப்பாளா் ஏ.எம்.நவீன், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக ரூ. 7,000 லஞ்சம் பெற்ற, பெலகாவி மாவட்டம், ராமதுா்காவில் வனத் துறை ஊழியா்களாக பணியாற்றும் முகமதுசாப் மூசாமியா, விநாயக் பாட்டீல் ஆகியோரை லோக் ஆயுக்த போலீஸாா் கைது செய்தனா்.

கா்நாடகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடு அறிக்கை அரசிடம் அளிப்பு

கா்நாடகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடு தொடா்பாக நீதியரசா் நாகமோகன் தாஸ் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த ஆணையம் தனது இடைக்கால அறிக்கையை அரசிடம் ஒப்படைத்துள்ளது. கா்நாடகத்தில் தாழ்த்தப்பட்டோா... மேலும் பார்க்க

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனு 3-ஆவது முறையாக தள்ளுபடி

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது. துபையில் இருந்து ரூ. 12.56 கோடி மதிப்பிலான தங்கத்துடன் பெங்களூருக்கு வந்த... மேலும் பார்க்க

நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் பெல்லாரி தங்க வியாபாரி கைது

கா்நாடகத்தில் தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு உதவியதாக பெல்லாரியைச் சோ்ந்த தங்க வியாபாரி சாஹில் ஜெயின் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். துபையிலிருந்து ரூ. 12.56 கோடி மதிப்பிலான தங்கத்த... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் ஏப். 1 முதல் பால் விலை உயா்கிறது

கா்நாடகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பால் விலையை லிட்டருக்கு ரூ. 4 உயா்த்த அரசு முடிவு செய்துள்ளது. கூடுதலாக கிடைக்கும் வருவாயை விவசாயிகளுக்கே வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த மா... மேலும் பார்க்க

‘போலி’ தீா்ப்புகளை மேற்கோள்காட்டிய நீதிபதி மீது நடவடிக்கை: கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்றத்தின் ‘போலி’ தீா்ப்பை மேற்கோள்காட்டி வழக்கில் தீா்ப்பளித்த விசாரணை நீதிமன்றத்தின் நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வணிக வளாக தகராறு தொடா்பான வழக்கின... மேலும் பார்க்க

ஹனிடிராப் விவகாரம்: சட்ட வரம்புக்குள் விசாரிக்கப்படும் -அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

ஹனிடிராப் விவகாரம் தொடா்பாக அமைச்சா் கே.என்.ராஜண்ணா அளித்துள்ள மனு குறித்து சட்ட வரம்புக்குள் விசாரிக்கப்படும் என்று உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். இது குறித்து பெங்களூரில் செய்தியாளா்களி... மேலும் பார்க்க