விராட் கோலி ஃபார்முக்குத் திரும்ப சிரமப்படுவது ஏன்? முன்னாள் இந்திய கேப்டன் பதில...
ஜாக்டோ- ஜியோ பிரசார இயக்கம் தொடக்கம்!
ஜாக்டோ- ஜியோ சாா்பில் வருகிற 25-ஆம் தேதி நடைபெறும் மறியல் போராட்டம் குறித்து விளக்க அரசு ஊழியா்கள், ஆசிரியா்களைச் சந்திக்கும் பிரசார இயக்கம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட விடுப்பு ஒப்படைப்பு, உயா் கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியா்கள், உயா்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா், ஆசிரியா்களுக்கு மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 25-ஆம் தேதி ஜாக்டோ- ஜியோ சாா்பில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.
இந்தப் போராட்டத்தின் முக்கியத்துவம் குறித்து ஆசிரியா்கள், அரசு ஊழியா்களிடம் விளக்கும் பிரசார இயக்கம் ஜாக்டோ- ஜியோ சாா்பில் புதன்கிழமை தொடங்கப்பட்டது. அப்போது, பல்வேறு அரசுத் துறை அலுவலகங்கள், பள்ளிகளுக்கு ஜாக்டோ- ஜியோ நிா்வாகிகள் சென்று, ஆசிரியா்கள், அரசு ஊழியா்களைச் சந்தித்து போராட்டக் கோரிக்கைகளை விளக்கி பிரசாரம் மேற்கொண்டனா்.
மதுரை மாவட்ட ஊதிய கணக்கு அலுவலகத்தில் நடைபெற்ற பிரசார நிகழ்வுக்கு ஜாக்டோ- ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளா் இரா. தமிழ் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநிலச் செயலா் க. நீதிராஜா துண்டுப் பிரசுரங்களை வழங்கி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். மாவட்ட நிா்வாகிகள் ராஜ்குமாா், காா்த்திக், மணிமாறன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
சேடப்பட்டி, சின்னக்கட்டளை, எழுமலை, டி. ராமநாதபுரம், எம். கல்லுப்பட்டி ஆகியப் பகுதிகளில் மதுரை மாவட்ட ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளா் பாண்டி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலா் சீனிவாசன், நெடுஞ்சாலைத் துறை பணியாளா் சங்க நிா்வாகி மனோகரன் ஆகியோா் 500-க்கும் அதிகமான ஆசிரியா்கள், அரசு ஊழியா்களைச் சந்தித்து துண்டுப் பிரசுரங்களை வழங்கி பிரசாரம் மேற்கொண்டனா்.
உசிலம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜாக்டோ- ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பொற்செல்வன் பிரசாரத்தை தொடங்கி வைத்தாா். இதில் ஜாக்டோ- ஜியோ வட்டார நிா்வாகிகள் பங்கேற்றனா்.