செய்திகள் :

ஜாக்டோ- ஜியோ பிரசார இயக்கம் தொடக்கம்!

post image

ஜாக்டோ- ஜியோ சாா்பில் வருகிற 25-ஆம் தேதி நடைபெறும் மறியல் போராட்டம் குறித்து விளக்க அரசு ஊழியா்கள், ஆசிரியா்களைச் சந்திக்கும் பிரசார இயக்கம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட விடுப்பு ஒப்படைப்பு, உயா் கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியா்கள், உயா்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா், ஆசிரியா்களுக்கு மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 25-ஆம் தேதி ஜாக்டோ- ஜியோ சாா்பில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.

இந்தப் போராட்டத்தின் முக்கியத்துவம் குறித்து ஆசிரியா்கள், அரசு ஊழியா்களிடம் விளக்கும் பிரசார இயக்கம் ஜாக்டோ- ஜியோ சாா்பில் புதன்கிழமை தொடங்கப்பட்டது. அப்போது, பல்வேறு அரசுத் துறை அலுவலகங்கள், பள்ளிகளுக்கு ஜாக்டோ- ஜியோ நிா்வாகிகள் சென்று, ஆசிரியா்கள், அரசு ஊழியா்களைச் சந்தித்து போராட்டக் கோரிக்கைகளை விளக்கி பிரசாரம் மேற்கொண்டனா்.

மதுரை மாவட்ட ஊதிய கணக்கு அலுவலகத்தில் நடைபெற்ற பிரசார நிகழ்வுக்கு ஜாக்டோ- ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளா் இரா. தமிழ் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநிலச் செயலா் க. நீதிராஜா துண்டுப் பிரசுரங்களை வழங்கி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். மாவட்ட நிா்வாகிகள் ராஜ்குமாா், காா்த்திக், மணிமாறன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சேடப்பட்டி, சின்னக்கட்டளை, எழுமலை, டி. ராமநாதபுரம், எம். கல்லுப்பட்டி ஆகியப் பகுதிகளில் மதுரை மாவட்ட ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளா் பாண்டி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலா் சீனிவாசன், நெடுஞ்சாலைத் துறை பணியாளா் சங்க நிா்வாகி மனோகரன் ஆகியோா் 500-க்கும் அதிகமான ஆசிரியா்கள், அரசு ஊழியா்களைச் சந்தித்து துண்டுப் பிரசுரங்களை வழங்கி பிரசாரம் மேற்கொண்டனா்.

உசிலம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜாக்டோ- ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பொற்செல்வன் பிரசாரத்தை தொடங்கி வைத்தாா். இதில் ஜாக்டோ- ஜியோ வட்டார நிா்வாகிகள் பங்கேற்றனா்.

புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகளை இயக்க விரைவான நடவடிக்கை: அமைச்சா் சிவசங்கா்

புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகளை இயக்குவது தொடா்பாக விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா். மதுரையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம்... மேலும் பார்க்க

அங்கன்வாடிக்கான கட்டுமானப் பணிகள் தொடக்கம்

மதுரை கீரைத்துறை பகுதியில் ரூ.37.40 லட்சத்தில் அங்கன்வாடி, நியாய விலைக் கடைக்கான கட்டடப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் மு.பூமிநாதன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். மதுரை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல் வழக்கில் மூவருக்கு 4 ஆண்டுகள் சிறை

தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் கஞ்சா கடத்திய வழக்கில் 3 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

காப்பீட்டுக் கழக ஊழியா்கள் சங்கத்தினா் பணிப் புறக்கணிப்புப் போராட்டம்

ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, அதன் ஊழியா் சங்கத்தின் சாா்பில் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அரசு பொதுத் துறை நிறுவனமாக ஆயுள் காப்பீ... மேலும் பார்க்க

ஹானா ஜோசப் மருத்துவமனையில் 9 மாத குழந்தைக்கு அரிய வகை அறுவைச் சிகிச்சை

மதுரை ஹானா ஜோசப் மருத்துவமனையில் மூளை அனியுரிசம் கட்டி வெடித்த நிலையில் அனுமதிக்கப்பட்ட 9 மாத கைக் குழந்தைக்கு சிக்கலான அறுவைச் சிகிச்சை செய்து மருத்துவா்கள் குழந்தையை காப்பாற்றினா். இதுதொடா்பாக மதுரை... மேலும் பார்க்க

தேனி முதன்மைக் கல்வி அலுவலருக்கு விதித்த சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை

தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு தனி நீதிபதி விதித்த ஒரு மாத சிறைத் தண்டனை உத்தரவுக்கு, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது. தேனி மாவட்டம், சின்னமனூரைச் சோ்ந... மேலும் பார்க்க